பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, March 2, 2016

திருச்சியில் 07-03-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநில செயற்குழு கூட்டம்.

                 தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு 07-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திருச்சி தெப்பக்குளம் பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
                இக்கூட்டத்தில் மாநில முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   
                         உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக உயர்த்துவது சார்ந்து தற்போது பெறப்பட்டுள்ள மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பிக்க அழைக்கிறோம். மாவட்ட செயலாளர்கள் மாநில அமைப்புக்கு செலுத்திட வேண்டிய அனைத்து நிலுவைத் தொகையினையும் எடுத்துவர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment