தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜன், இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் 27-06-2014 அன்று சென்னையில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், கல்வித்துறைச்செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை சந்தித்து சென்னைஉயர்நீதி மன்றம் மதுரைக்கிளையின் உத்தரவினை நடைமுறைப்படுத்திட கோரினார்கள்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Monday, June 30, 2014
Thursday, June 26, 2014
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காத 77 தலைமை ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி வழக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காத, 77 தலைமை ஆசிரியர்கள் மீதான
குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தக்கோரிய வழக்கில்
பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீசு அனுப்ப சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரை சேர்ந்த கண்ணன் கோவிந்தராஜூ தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகைநாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் 77 தலைமை ஆசிரியர்கள், 2011-12 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.81 லட்சம் கல்வி உதவி தொகையை வழங்கவில்லை என்று அவர்களை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி உத்தரவிட்டது.
இதன்பின்னர், அந்த தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்தது. இதற்கிடையில், 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 77 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விசாரிக்க வேண்டும்
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வி துறையிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை 77 தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறியது. ஆனால், தலைமை ஆசிரியர்களுக்கு எப்படி மீண்டும் பணி வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
எனவே மாணவர்கள் உதவி தொகையை கையாடல் செய்த 77 தலைமை ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை உடனடியாக விசாரிக்கும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
நோட்டீசு
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுவுக்கு வருகிற ஜூலை 9-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
சென்னை ஐகோர்ட்டில், காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரை சேர்ந்த கண்ணன் கோவிந்தராஜூ தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகைநாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் 77 தலைமை ஆசிரியர்கள், 2011-12 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.81 லட்சம் கல்வி உதவி தொகையை வழங்கவில்லை என்று அவர்களை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி உத்தரவிட்டது.
இதன்பின்னர், அந்த தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்தது. இதற்கிடையில், 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 77 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விசாரிக்க வேண்டும்
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வி துறையிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை 77 தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறியது. ஆனால், தலைமை ஆசிரியர்களுக்கு எப்படி மீண்டும் பணி வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
எனவே மாணவர்கள் உதவி தொகையை கையாடல் செய்த 77 தலைமை ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை உடனடியாக விசாரிக்கும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
நோட்டீசு
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுவுக்கு வருகிற ஜூலை 9-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
Monday, June 23, 2014
விடுமுறை கால பயண சலுகையில் மோசடிஅரசு ஊழியர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை
புதுடில்லி:விடுமுறை கால பயணச் சலுகையில் மோசடி செய்ததாக, நிதி
அமைச்சகத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற அதிகாரிகள் உட்பட, ஐந்து பேருக்கு,
நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அரசு
அதிகாரிகளுக்கு அளிக்கப்படும், விடுமுறை கால பயணச் சலுகையில், போலி பில்களை
கொடுத்து, 4.2 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, நிதி அமைச்சகத்தை சேர்ந்த,
ஐந்து அதிகாரிகள் மீது, வழக்கு தொடரப்பட்டது. இதில், மூன்று பேர், பணியில்
இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் மீதான
வழக்கு, டில்லி சி.பி.ஐ,, கோர்ட்டில் நடந்தது. இதில், சமீபத்தில்
தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி சஞ்சீவ் ஜெயின் அளித்த தீர்ப்பு:
லஞ்சம்,
ஊழல் போன்ற முறைகேடுகள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய
முட்டுக்கட்டைகளாக உள்ளன. லஞ்சத்தை, ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.
லஞ்சம்
வாங்கியவர்களுக்கும், ஊழல் செய்தவர்களுக்கும் பயம் ஏற்பட வேண்டுமெனில்,
இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க
வேண்டும்.எனவே, விடுமுறை கால பயணச் சலுகையில் மோசடி செய்த ஐந்து
பேருக்கும், நான்காண்டு சிறைத் தண்டனையும், தலா, ஒரு லட்சம் ரூபாய்
அபராதமும் விதிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.
Wednesday, June 18, 2014
உதவி தொடக்க கல்வி அலுவலர் 156 பேருக்கு மாறுதல் உத்தரவு
சென்னை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான
கலந்தாய்வில், 156 பேர், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றனர். தொடக்கக்
கல்வித் துறையில் பணியாற்றும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, பொது
மாறுதல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் நடந்தது. இயக்குனர் இளங்கோவன்
தலைமையில், 'ஆன் - லைன்' வழியில், 32 மாவட்டங்களிலும், கலந்தாய்வு நடந்தது.
இதில், 344 அலுவலர்கள் பங்கேற்றனர். 156 பேர், விருப்பமான இடங்களை தேர்வு
செய்தனர். இவர்களுக்கு உடனே, பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டன.
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக, பணி
மாறுதல் கலந்தாய்வும், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏழு தலைமை
ஆசிரியர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக, பணி மாறுதல் பெற்றனர்.
Saturday, June 14, 2014
ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு - தொடர்நடவடிக்கை சங்கம் மேற்கொண்டுள்ளது.
மதுரை:உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை
மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ், மதுரை ஐகோர்ட்
கிளையில் தாக்கல் செய்த மனு:ஏ.இ.ஓ.,வாக பணியாற்றிய நான், 2010 ஜனவரியில்
ஓய்வு பெற்றேன். அலுவலகத்தில் மேற்பாற்வையாளர், என்னைவிட கூடுதல் சம்பளம்
பெற்றார். அவருக்கு இணையாக சம்பளம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு
அனுப்பினேன். 2011 ஜனவரியில் ஒருநபர் குழு பரிந்துரைப்படி, ஆசிரியர்கள்,
மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊதியம் மறுநிர்ணயம் செய்தபோது, எங்களுக்கு
செய்யப்படவில்லை.
ஏ.இ.ஓ., பதவி நடுநிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு இணையானது என்பது உண்மை இல்லை. எங்களுக்கு மேல் பணியிடம்
கிடையாது. எனவே ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பள விகிதம் நிர்ணயம் செய்ய
வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.நீதிபதி மகாதேவன் முன்னிலையில் மனு
விசாரணைக்கு வந்தது. அவரது உத்தரவு:மேற்பார்வையாளர் சம்பளம் ஐகோர்ட்
உத்தரவுப்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 'நடுநிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு இணையான ஏ.இ.ஓ.,க்களுக்கு கூடுதல் சம்பளம் நிர்ணயிப்பதால்,
கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது
ஒரு சிறப்பு நிலைப் பணி. இதற்கு பதவி உயர்வு கிடையாது. தமிழக அரசு 2011
அக்டோபரில் பிறப்பித்த உத்தரவில், 'ஏ.இ.ஓ., பணி நடுநிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு இணையானது இல்லை' என தெரிவித்துள்ளது. எனவே அவர்களுக்கு
தனியாக சம்பளம் நிர்ணயம் செய்து இருக்க வேண்டும். தேர்வு நிலை பணிக்கான
நோக்கத்தை தொழில்நுட்ப காரணம் கூறி மறுக்கக் கூடாது. எனவே அரசு உத்தரவு
சட்ட விரோதமானது. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சம்பள நிர்ணயம்
தொடர்பான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பளம்
நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
Wednesday, June 11, 2014
Tuesday, June 10, 2014
Sunday, June 8, 2014
Friday, June 6, 2014
தலைமைச்செயலகத்தில் 04-06-2014 புதன் அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர், தலைமைச்செயலாளர் ஆகியோருடன் மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு.
மாண்புமிகு கால்நடைத்துறை அமைச்சர் அவர்களுடன் மாநில பொதுச்செயலாளார், மாநில தலைவர்
மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு
மாநில தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜ், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில துணைச்செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் கல்வியாண்டின் தொடக்கத்தினை இயக்குநர் பெருமகனார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதவி உயர்வு கோரிக்கை, பயணப்படி நிலுவை சார்பாக பேசினார்கள்.
முன்னதாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மதிப்புமிகு மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை அரசு துணைச்செயலாளர் (சிறப்பு) மதிப்புமிகு சு.பழனிசாமி இ.ஆ.ப. அரசு துணைச்செயலாளர் (தொடக்கக்கல்வி) மதிப்புமிகு செல்வராஜ் ஆகியோரை சந்தித்து நமது முக்கிய கோரிக்கையான பதவி உயர்வு பணியிடம், பயணப்படி நிலுவை, நேரடி நியமன AEEO ஊக்க ஊதிய உயர்வு, பாடப்புத்தகம் & குறிப்பேடுகள் லாரி வாடகை ஆகியவை சார்ந்து விரிவாக பேசப்பட்டது. விரைவில் உரிய சட்ட திருத்தம் (amendment) வெளியிடுதல் குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.
Monday, June 2, 2014
Sunday, June 1, 2014
திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முனைவர் திரு. பொன்னம்பலம் பணி ஓய்வு- மாநில இணைச்செயலாளர் பாராட்டு.
திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றி 31-05-2014 அன்று பணி ஓய்வு பெற்ற தேசிய நல்லாசிரியர், முனைவர் திரு.எல்.பொன்னம்பலம் அவர்களுக்கு மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் புகழேந்தி சாக்ரட்டிஸ், செயலர் ஜெகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி, மாவட்ட உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் முத்துக்குமார், ஜான் போஸ்கோ, புகழேந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.
Subscribe to:
Posts (Atom)