தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் தீவிர உறுப்பினரும், நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலருமான திரு. செந்தில் வேலன் அவர்கள் 14-10-2013 ஞாயிறு அன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்த போது மாரடைப்பின் காரணமாக அகால மரணம் அடைந்தார். இச்செய்தி கேட்டு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் அனைவரும் ஆழ்ந்த துயரம் அடைந்தனர். தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் நேரில் குத்தாலம் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கும் பொதுச்செயலாளர் மூலம் செய்தி தெரிவிக்கப்பட்டது. இயக்குநர் பெருமகனார் அவர்களும் அதிர்ச்சியுற்றதுடன் தமது ஆழ்ந்த வருத்ததையும் இரங்கலையும் அன்னாரது குடும்பத்திற்கு தெரிவித்தார். அன்னாரின் பிரிவால் துயரமடைந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் சக உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Monday, October 14, 2013
Friday, October 11, 2013
திருச்சி மண்டலம் - ஆய்வுக்கூட்டம் 19.10.2013 - 7 மாவட்ட DEEOs / AEEOs / AAEEOs/ BRS SUPERVISORs ஆகியோர்களுக்கு நடைபெற உள்ளது.
திருச்சி மண்டலம் - 7 மாவட்ட DEEOs / AEEOs / AAEEOs/ BRS SUPERVISORs ஆகியோர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 19.10.2013 அன்று திருச்சி பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இயக்குநர் உத்தரவை படித்திட CLICK செய்க.
ஆய்வுக்கூட்டத்திற்கு கொண்டுவர வேண்டிய விவரங்கள்.
Subscribe to:
Posts (Atom)