பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, June 16, 2015

பணப்பலனை திரும்ப ஒப்படைக்ககல்வித் துறை திடீர் உத்தரவு ஓய்வு தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி - நன்றி தினமலர்.

மதுரை,: மதுரையில் தொடக்க பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்று பல ஆண்டுகளான நிலையில், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பணப் பலன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் உத்தரவால் அதிர்ச்சியில் உள்ளனர்.மதுரை மாவட்டத்தில் டி.கல்லுப்பட்டி உட்பட 15 கல்வி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக நியமனம் பெற்று, 1.6.1988க்கு பின் தலைமையாசிரியர்களாக பணியேற்ற 100க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு தொடக்க கல்வி அலுவலகங்கள் சார்பில் நேற்று ஒரு உத்தரவு அனுப்பப்பட்டது.உத்தரவில், ''அரசாணை 207' ன்படி உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தனிஊதியம் அடிப்படையில் பெறப்பட்ட ஓய்வூதிய பலனில் இருந்து, அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டிய தொகை இவ்வளவு' என்றும் 'ஜூன் 26க்குள் அதை திரும்ப செலுத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ரூ.68 ஆயிரத்தில் இருந்து இத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பெற்ற சிலர் அதிர்ச்சியுற்றனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் செல்லப்பாண்டியன், முத்துக்குமார், தென்னவன் கூறியதாவது:
தொடக்க கல்வியில் 1.6.1988 அன்று தலைமையாசிரியர்களாக பணியேற்றவருக்கு தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு பின் பணியேற்றவர்கள் தங்களுக்கும் தனிஊதியம் நிர்ணயிக்க நீதிமன்றம் சென்றனர். இதன்படி 'அரசு உத்தரவு 207' பிறப்பிக்கப்பட்டு பணப் பலன் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து அரசு உத்தரவில் முரண்பாடு இருப்பதாக கூறி வழங்கிய பணத்தை திரும்ப செலுத்துமாறு கல்வித் துறை உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி பிறப்பிக்கப்பட்டதில் முரண்பாடு இருப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. இதை ரத்து செய்ய வேண்டும். மேலும் நிலுவை தொகை வழங்காத ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கும் அதை வழங்க வேண்டும். மாநில கணக்காயர் அலுவலகம் நிர்ணயம் செய்ததை உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்ய முடியாது என்றனர்.

கர்நாடகாவில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு - நன்றி தினமலர்.

பெங்களூரு: கர்நாடகாவில், 7ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பிட, தகுதி தேர்வு நடத்த ஆலோசித்து வரும் கல்வித்துறை, தற்போது, ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது.
ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அறிய முன்வந்துள்ள கல்வித்துறை, மாநிலத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது. ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்படும். கர்நாடகாவில், 44 ஆயிரத்திற்கும் மேல் துவக்கப் பள்ளிகள் உள்ளன. இதில், 1.74 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தரமான கல்வியளித்தால் மட்டுமே, பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைப்பது சாத்தியம். இந்த எண்ணத்தில், ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்த, கல்வித்துறை தீர்மானித்துள்ளது.இதன் மூலம் ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறனை மதிப்பிட்டு, அவர்களுக்கு பயிற்சியளிப்பது அரசின் திட்டம்.மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர், பசவராஜ் குரிகார் கூறுகையில், ''தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்துவது, முட்டாள் தனம். அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, தேவையின்றி தேர்வு நடத்தினால் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

Sunday, June 14, 2015

திருச்சியில் இன்று 14-06-2015 நடைபெற்ற மாநில செயற்குழு.


இன்று  மாநில தலைவர் சு.பாலகிருஷ்ணன் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.    உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் ஊதியப்பட்டியல் Web Pay Roll மூலம் தயாரிக்க அடிப்படை தேவையான வலைதள வசதி உருவாக்கி கொடுத்திட இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. 
2.      2013 - 2014 ; 2014 - 2015 ; 2015 - 2016 ஆகிய மூன்று கல்வியாண்டிற்கு நோட்டுப்புத்தகம் எடுத்து வந்து பள்ளிகளுக்கு வழங்கியமைக்கான லாரி வாடகை - ஏற்று கூலி,  இறக்கு கூலி உடனே வழங்க வேண்டுமாய் இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
       மாநில முழுவதும் இருந்து வந்த மாவட்ட செயலாளர்கள் மாநில மாநாடு நன்கொடை, உறுப்பின் சந்தா, வளர்ச்சி நிதி ஆகியவற்றின் அடிக்கட்டுகளை ஒப்படைத்தனர். வழங்காத மாவட்டங்கள் ஒரு வாரத்தில் ஒப்படைத்திட உறுதியளித்தனர். மேலும் மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் பற்றியும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 30 பேர் கொண்ட பட்டியல், மாறுதல் கலந்தாய்வு, மாநில அமைப்பின் செயல்பாடுகள், மாநிலத் தலைவர் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்துதல், ஜீலை மாதம் முதல் வாரத்தில் மாநில பொதுக்குழுவை கூட்டுவது உட்பட பல்வேறு நடைமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. 










 

Wednesday, June 10, 2015

திருச்சி - சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 14-06-2015 அன்று தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

         மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது வருகைதர வேண்டும். முடிவுற்ற மாநில மாநாட்டு நன்கொடை நிதி அடிக்கட்டுகள், மலர் விளம்பர நிலுவைகள் ஆகியவற்றை மாவட்ட செயலாளர்கள் ஒப்படைத்திட வேண்டும். மாவட்ட அளவில் பயணப்படி நிலுவை விபரம் பட்டியல், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கும் இடையே உள்ள தொலைவு விபரம் ஆகியவற்றை பொதுச்செயலாளர் வசம் கூட்டத்தில் வழங்கிடவும்.
          பதவி உயர் வழக்கு விபரம், உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு,  மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் உறுப்பினர்களால் கூட்டத்தில் கொண்டுவரப்படும் பொருள் பற்றி விவாதிக்கப்பட உள்ளதால் அனைவரும் தவறாது பங்கேற்க அழைக்கிறோம்.

மழலையர் முன்பருவக்கல்வி கூடங்களை ஒழுங்குபடுத்தும் வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ஆலோசனைகள் வழங்கவிரும்புவோர் கீழ்க்கண்ட விபரப்படி வழங்கலாம்.

DIRECTORATE OF ELEMENTARY EDUCATION

The Draft Code of Regulations for Play Schools, 2015 is posted
in the Website (http://www.tn.gov.in/schooleducation/) for Opinion
of the Public .

Individuals / others may send their suggestions to the email id
deechennai@gmail.com or to the following address by post on or
before 5:00 p.m. on 22.06.2015
Director of Elementary Education,
Office of the Directorate of Elementary Education,
DPI Campus, College Road,

Chennai- 600 006
DIRECTOR OF ELEMENTARY EDUCATION

நிலுவை வழக்குகளால்தள்ளாடும் கல்வித்துறை:சட்ட அலுவலர் அவசியம் - நன்றி தினமலர்.

திண்டுக்கல்:கல்வித்துறையில் சட்ட நுணுக்கம் தெரிந்தோர் இல்லாததால் ஏராளமான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனால் மற்ற பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு தொடர்பான ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்தில் தனித்தனி உதவியாளர்கள் கவனிக்கின்றனர்.அவர்களே நீதிமன்றங்களுக்கு தாக்கல் செய்ய வேண்டிய பதில்களை தயாரிக்கின்றனர். சட்ட நுணுக்கம் சரியாக தெரியாததால் பதில்களை முறையாக தயாரிப்பதில்லை. இதனால் பல வழக்குகளில் கல்வித்துறைக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளது. சில நேரங்களில் பணிச்சுமையால் பதிலை தாக்கல் செய்வதில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாவதோடு, ஏராளமான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மேலும் உதவியாளர்கள் அடிக்கடி நீதிமன்றத்திற்கு சென்று விடுவதால் மற்ற பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க செயலாளர் சிவக்குமார் கூறியதாவது: சட்ட நுணுக்கம் தெரியாததால் நீதிமன்றத்திற்கு பதில் தயாரிக்க முடியாமல் தவிக்கிறோம்.
மாவட்டந்தோறும் 300 வழக்குகள் வீதம் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. சொந்தப் பணத்தில் வழக்கறிஞர் கட்டணம் செலுத்துகிறோம்.
இப்பிரச்னையை தீர்க்க மாவட்டந்தோறும் கல்வித்துறைக்கென சட்ட
அலுவலரை நியமிக்க வேண்டும், என்றார்.

பணிப்பதிவேடுகளில் பதிவுகள் மேற்கொள்வதில் உள்ள குறைகளை சரிசெய்திடும் வகையில் அரசு வெளியிட்டுள்ள மாதிரி பதிவுகள் அடங்கிய அரசுக்கடிதம்.

மகப்பேறு விடுப்பு அனுமத்தித்தல் சார்ந்து அரசு அளித்துள்ள விளக்கம்.

01-01-2015 அன்று உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் 17-05-2015 அன்று நடைபெற்ற தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு தீர்மானங்கள்.




17-05-2015 அன்று சென்னை பல்லாவரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானங்கள்.
1.          தடைகளை வென்று 5ஆம் முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி   டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். (மாண்புமிகு மக்களின் முதல்வர் அவர்கள் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட வேண்டும் என சங்கத்தின் சார்பாக 06-10-2014 அன்று சீர்காழியில் உள்ள அண்ணன் பெருமாள் கோயிலில் சகஸ்ஹரநாம அர்ச்சனை செய்துள்ளதை இந்நேரத்தில் நினைவுகொள்கிறோம்).
2.          Web Pay Roll மூலம் மாதந்தோறும் ஊதியப்பட்டியல் தயாரித்திடுவதற்கு ஏற்ப அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கும் வலைதள வசதி ஏற்படுத்தித்தர தமிழக அரசை கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
3.          உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு முன்னுரிமைப்பட்டியல் 01-01-2015 அன்றைய நிலவரப்படி வழங்கிட தொடக்கக்கல்வி இயக்குநரை கேட்டுக்கொள்கிறோம்.
4.         உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டுமாய்  கேட்டுக்கொள்கிறோம்.
5.         உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு சில்லரைச் செலவினத்தை அதிகப்படுத்த வேண்டுமாய் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

6.         தொடக்கக்கல்வித்துறை சார்ந்த பணிகள் தவிர்த்து மற்ற பணிகள் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அளிக்கும் போது தொடக்கக்கல்வி இயக்குனர் வழியாக நடைமுறைப்படுத்திட வேண்டும் எனவும் மற்ற இயக்குனர்களும், முதன்மைக்கல்வி அலுவலர்களும் நேரடியாக எந்த பணியையும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் அனுமதிக்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.
7.          உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3% உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வினை தகுதிவாய்ந்தோர் பட்டியலில் உள்ள  உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கும் போது பதவி உயர்வினை துறக்க விருப்பம் தெரிவித்தால் அவ்விடத்தில் அடுத்தடுத்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கி அரசாணை 182 முழுமையாக நடைமுறைப்படுத்திட கேட்டுக்கொள்கிறோம். கடந்த கலந்தாய்வின் போது பதவி உயர்வினை பணித்துறப்பு செய்த 3 பணியிடங்களுக்கு முன்னுரிமையில் உள்ள அடுத்த 3 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் உடனே வழங்கிட மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. மேலும் காலதாமதம் ஆகும் பட்சத்தில் சட்டரீதியாக தீர்வு காண செயற்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது.

மாநிலத்தலைவர்      பொதுச்செயலாளர்          மாநிலப்பொருளாளர்

   மாநில பொதுச்செயலாளர் செயற்குழு தீர்மானங்களை வாசிக்கின்றார்.