பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Thursday, January 15, 2015

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்.

Tuesday, January 13, 2015

Wednesday, January 7, 2015

மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து இயக்குநர்கள், துணை இயக்குநர்களை சந்தித்து தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் நாட்காட்டி, நாட்குறிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

            மாநில அமைப்பின் சார்பில் மாநில தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜ், இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், தலைமைநிலையச்செயலாளர் இராஜேந்திரன், துணைச்செயலாளர் ரெங்கராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள் 05-01-2015 அன்று மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர், பள்ளிக்கல்வி , தொடக்கக்கல்வி இயக்குநர்களையும், துணை இயக்குநர்களையும் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து நாட்காட்டி, நாட்குறிப்பு வழங்கினார்கள்.




Sunday, January 4, 2015

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி வெளியிட்டு நிகழ்வுகள்.

 தமிழ்நாடு உதவி  தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி வெளியிட்டு நிகழ்ச்சி மாநில துணைத்தலைவர் திரு.கே.எம். சீனுவாசன் அவர்கள் தலமையில் திருச்சியில் நடைபெற்றது திருச்சி மாவட்ட செயலாளர் இ.ஜெகநாதன் அனைவரையும் வரவேற்றார்.மாநில மகளிர் அணி துணைச்செயலாளர்  ஆ.பூங்கொடி அவர்கள் வெளியிட மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார். பொதுச்செயலாளர் சு.பாஸ்கர் மற்றும் மாநில தலைவர் சு.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள இயலாத நிலையின் காரணமாக மாநில பொருளாளர் ப.மாதவராஜன், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில தலைமைநிலையச்செயலாளர் மு.இராஜேந்திரன் ஆகியோர் சங்க நிகழ்வுகளையும் மாநில மாநாட்டு செய்திகளையும் விளக்கினார்கள். 27 மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில மகளிர் அணி துணைச்செயலாளர் பூங்கொடி நன்றி கூறினார். 










              

Thursday, January 1, 2015

பொதுச்செயலாளர் பாஸ்கர் அவர்களின் மூத்த சகோதரர் மரணம். தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது.



            தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு சு.பாஸ்கர் அவர்களின் மூத்த சகோதரர்  திரு. சு.வெங்கடவரதன் அவர்கள் இன்று (01-01-2015) அதிகாலை மரணம் அடைந்தார்.  அவரின் பிரிவால் வாடும் பொதுச்செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது.

அனைவருக்கும் 2015 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்