பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Thursday, November 9, 2017

DEE -TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே அரசு உதவி பெறும் தொடக்க /நடு நிலை பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டும் -தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!




பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்

சென்னை : கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக இருந்த குப்புசாமி, பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனராகவும்,

பள்ளிக்கல்வி, பணியாளர் பிரிவு இணை இயக்குனராக இருந்த சசிகலா, ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராகவும்,

ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட இயக்கக இணை இயக்குனராக இருந்த குமார், கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராகவும்,

எஸ்.எஸ்.ஏ இயக்கக இணை இயக்குனராக இருந்த ஸ்ரீதேவி, தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாக பிரிவு இணை இயக்குனராகவும்,

ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராக இருந்த ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஏ., இயக்கக இணை இயக்குனராகவும்,

தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாக பிரிவு இணை இயக்குனராக இருந்த நாகராஜ் முருகன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்கக இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tuesday, November 7, 2017

கண் துடைப்பாகும் கல்வி ஆய்வு கூட்டங்கள் : களத்தில் கலெக்டர்கள்.

மதுரை: கல்வித்துறை செயல்பாடு குறித்து அத்துறை அதிகாரிகளின் ஆய்வு அறிக்கைகளில் திருப்தி அளிக்காததால், கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அறிக்கை அளிக்க கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கற்றல், கற்பித்தல் மேம்பாடு, மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம், மாணவர்கள் கற்றல் திறன், பள்ளிகளில் அடிப்படை வசதி குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள், 14 வகை நலத்திட்டங்கள், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டங்களில் நடக்கும் கட்டடப் பணிகள், புதிய வகுப்பறை, பள்ளி சுற்றுச்சுவர் பணிகள் மற்றும் 'நபார்டு' திட்டத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் மாவட்ட கல்வி அதிகாரிகள் சார்பில் அறிக்கை
தயாரித்து, துறை செயலருக்கு அளிக்கப்படுகின்றன.
மேம்போக்காக உள்ள இந்த அறிக்கைகளில் திருப்தி இல்லாததால், கலெக்டர்கள் மூலம் விரிவான ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி கல்வித்துறை செயல்பாடு குறித்து கலெக்டர்கள் ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும்
விரிவான அறிக்கை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர்களுக்கு, துறை செயலர் பிரதீப் யாதவ்
கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், 'கல்வித் துறையில் ஆர்வம் உள்ள பல கலெக்டர்கள் பள்ளிகளில் ஆய்வு செய்கின்றனர். இது கற்றல் கற்பித்தல் மேம்படவும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உந்துதலாகவும் உள்ளது.
இது கல்வித்தரம் அதிகரிக்க வழிவகுக்கும். இதுபோல் அனைத்து கலெக்டர்களும் ஆய்வு செய்து முழு அறிக்கை, கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு ஆலோசனைகள் வழங்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.
கண் துடைப்புக்காக பெயரளவில் ஆய்வுகள் நடத்தி அறிக்கை சமர்ப்பித்த கல்வி அதிகாரிகளுக்கு, செயலரின் இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்க! : அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தல்.

         'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், பாடத்திட்டம், பள்ளிகளின் செயல்பாடு, ஆசிரியர்கள் நியமனம், கற்பித்தல் முறை, தொழில்நுட்பம் என, அனைத்தையும் மேம்படுத்த, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

       வழக்கு பதிவு : இதையொட்டி, பல்வேறு வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 'நீட்' தேர்வு பயிற்சி மையங்கள் அமைத்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் நியமனம், பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு விதிகள் வகுத்தல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை தொடர்பாக, பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதேபோல, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதார் விபரங்களை சேகரிப்பது, திட்ட குழுவின் பரிந்துரைப்படி நிதியை பெற்று, அதன் செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்வது என, பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசும் பிறப்பித்துள்ளது.
தாமதம் கூடாது : இதுகுறித்து, தமிழக அரசின் பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குனர்களுக்கு, பல்வேறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், 'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற வழக்குகளில், நீதிபதிகள் கேட்கும் தகவல்களை விரைந்து வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, உரிய விதிகளின்படி பின்பற்ற வேண்டும்; தாமதம் கூடாது' என, குறிப்பிட்டு உள்ளார்.

Wednesday, November 1, 2017

அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'

        அரசின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, மேற்படிப்பு படிக்க, பாஸ்போர்ட் எடுக்க, வெளிநாடு செல்ல மற்றும் சொத்துகள் வாங்க, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, 'சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் பாயும். இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 4,300 ஆசிரியர்கள், தங்கள் துறையின் முன் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்துள்ளனர்.படித்து முடித்த பின், பின் ஏற்பு அனுமதி தரும்படி, கல்வித் துறைக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
       இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, முன் அனுமதி பெறாதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகளை அணுகி வருகின்றனர்.

Sunday, October 22, 2017

7 வது ஊதியக்குழு - சில தகவல்கள்.

ஊதியஉயர்வுorஊதியநகர்வு
=========================

 1) வளரூதியம்(Increment)
      ===================
Increment கணக்கீட்டில் நாம்  3%கணக்கிடும்போது, அவ்வாரு வரும், புதியஅடிப்படை ஊதியம்தான்  ஊதியஅணியில் (paymatrix) நமக்கான நிலைக்குநேராக மேலிருந்துகீழ் தொடா்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது,
என்பதால் இனி Increment சமயங்களில் தனியாக கணக்கீடுகள் மேற்கொள்ள
தேவை இல்லை.
எனவே 3% Increment எணில் தற்போது பெரும் புதிய ஊதியத்திற்கு அடுத்த ஊதியத்தைப் புதிய அடிப்படை ஊதியமாக எடுத்து கொள்ளவேண்டும்.

2)ஊக்கவளரூதியம்(Incentive)
    =======================
      ஊக்க வளரூதியம் எனில் 3%+3% தற்போது பெரும் புதியஊதியத்திறக்கு அடுத்த இரண்டாவது ஊதியத்தை எ.டு;10 ம் Pay cell ஊதியம் பெற்றால் 12ஆம் Pay Cell ஊதியத்தை அடிப்படை ஊதியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

3)தோ்வுநிலை(Selectiongrade)
    =======================

4) சிறப்புநிலை(Specialgrade)
    =======================
         Rs 1300முதல்Rs 5700 வரையிலான தரஊதியம்(Gp) அதாவது Level 1 முதல் 23 வரை நமது துறையைப் பொருத்தவரை OA முதல் Add.To &AO வரை ஒரே பணியிடத்தில் 10 ஆண்டுகள் (தோ்வுநிலை)20 ஆண்டுகள் (சிறப்புநிலை)பணிபுரிந்தால், வழக்கத்தின்படியே 3%+3%, ஊதியஉயர்வு பெற்றுக்கொள்ளலாம்.

எனவே இதனையும் தனியே கூட்டிப் பெருக்காமல்,ஒவ்வொரு 3%திற்கும் ஊதியஅணியில் (Paymatrix)தான் உள்ள ஊதிய நிலையின் அடுத்த ஊதியத்திற்கு நகா்ந்து விடலாம்.இது3%+3% என்பதால் ஊதிய அணியில்
(Paymatrix) தற்போதுபெற்றுள்ள புதிய ஊதீயத்திலிருந்து2வது ஊதியத்திற்கு நகர வேண்டும்.
அதாவது 12 ஆம் Pay cellஐ அடிப்படையாக கொண்ட நபர் 14 ஆம் அணிஊதியத்திற்கு நகர்ந்து அதையே அடிப்படை ஊதியமாகப் பெருவாா்.

5)தேக்கவளரூதியம்(Stagnaton Increment)
     ========
                   
தரஊதியம் Rs. 6000முதல் 10000 அதாவது (Level 24 முதல் 32 வரை) உள்ளோா்.நமது துறையைப் பொருத்தவரை கரூவூல அலுவலா்&CAO பணியிடம் மற்றும் அதற்கும் மேல் உள்ள பணியிடங்களில்,ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 10 ஆண்டுகள் பணி முடித்தால் ஒவ்வொரு 10 ஆண்டு முடிவிலும்,3%தேக்க வளரூதியம் அனுமதிக்கபடும்.அவரது நிலையில், 14 ஆம்அணி ஊதியம்(PayCell) பெருபவர் 15 ஆம் அணிஊதியத்திற்கு(Paycell) நகர்த்ப்படுவாா்.

6)வெகுமதி வளரூதியம்
 ========= ===========
(Bonus Increment)
===============
 ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 30 ஆண்டுகள் பணிமுடித்திருந்தால்,30 ஆம்
ஆண்டு முடிவில் 3%Bonus Increment அனுமதிக்கப்படும். Paymarrix ல் உள்ள Paycellல் 15 ஆம் அணி(PayCell) ஊதியம் பெருபவர் 16 ஆம் நிலை ஊதியத்திற்கு நகா்த்தப்படுவாா்.

7)கூடுதல் வளரூதியம்
    =================
    (Additional Increment)
==================
         01.01.2016 ல்  பழைய ஊதிய அடிப்படையில் தனது நிலைக்கான உச்சபச்சஊதியத்தை, அடைந்தால் அதாவது 5200−20200 என்பதில் 20200
என்ற உச்சபச்சத்தை அடைந்ததால் 2 ஆண்டுகள் ஊதிய உயர்வின்றி இருப்பவருக்கு 01.01.2016 ல் புதிய ஊதியத்தை நிர்ணயித்தபிண் கூடுதலாக
ஒரு 3% Increment அளிக்கவேண்டும்.இவர் 2 ஆண்டிற்கும் மேலாக இதே நிலையில் (20200) இருந்திருப்பாரேயானால் .ஒவ்வொரு 2ஆண்டு முடிவிற்கும்3% Increment அனுமதித்து புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படவேண்டும்.

8)முத்தோா் இளையோா் ஊதிய முரண்பாடு
    ==================
(Junior get MorePay)
=======================

இதற்கு 3%Increment மட்டும் அனுமதிக்கப்படும். அதாவது இளையோரை விட
முதியவருக்கு Pay Cellல் ஒரு Cell அதிகரிக்கப்படும். இளையோா் 15 ஆம் PayCell என்றால் மூத்தோா்16 ம் Pay செல்லில் வைக்கபடுவாா்.

9)தனிஊதியம்( Personal Pay)
   =======================
        ஆசிரியர்,BDO, Thashiltar, போன்றோா் பெற்றுவந்த தனிஊதியம் 500&750 தொகையானது 1300&2000 மாக உயர்த்தபட்டுள்ளது. ஆனால் 6 ம் ஊதியக்குமு
போன்று 7 ம் ஊதியக்குமுவில் தனி ஊதியஉயர்வு கணக்கீட்டிற்கு,(எந்தவிதமான ஊதியஉயர்வு கணக்கிட்டிற்கும்), இத்தொகையை எடுத்துக்கொள்ளக்கூடாது. அகவிலைப்படி கணக்கிட எடுத்துக்கொள்ளலாம். வீட்டு வாடகைப்படி கணக்கிட எடுத்துக்கொள்ளக்கூடாது.

மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு சி.பி.எஸ்.இ., அறிவிப்பால் உற்சாகம்.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக வயது குழப்பம் நிலவுகிறது.
பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது, சம்பந்தப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால், வயதை காரணம் காட்டி, மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது.

திருப்பி அனுப்பும்

நான்கரை வயது அல்லது ஐந்து வயது முடியும் முன், சி.பி.எஸ்.இ., பள்ளியில், 1ம் வகுப்பில் சேர மாணவர் சென்றால், 'மார்ச், 31ல், ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும்' என, அட்மிஷன் வழங்காமல், மாணவர்களை பள்ளிகள் திருப்பிஅனுப்பும். ஆனால், தமிழக பாடத்திட்ட மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வயது வரம்பு பிரச்னைக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.'பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வயது பற்றி குழப்ப வேண்டாம்; பள்ளிகள் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றதோ, அந்த மாநிலம் பின்பற்றும் வயது வரம்பை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றலாம்' என, தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், பொது தேர்வு எழுதுவதற்கான, ஆன் - லைன் பதிவுக்கான, சி.பி.எஸ்.இ., சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளில், இது, தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

தேர்வு எழுத வாய்ப்பு

இதன்படி, தமிழகத்தில், ஜூலை,31ல், 14வயது முடிந்தோர், 10ம் வகுப்பு தேர்வையும்; 16 வயது முடிந்தோர்,பிளஸ் 2 தேர்வையும் எழுதலாம். இந்த வயதையும் விட குறைவாக இருந்தால், மருத்துவ தகுதி சான்றிதழ் வாங்கி கொடுத்தால், தேர்வை எழுத வாய்ப்பு உள்ளது.அதே போல், ஜூலை, 31ல், நான்கு வயது முடிந்தோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர முடியும். எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வயது பிரச்னையில் தவிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான தீர்வு கிடைத்து உள்ளது.

Friday, October 13, 2017

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு.

       தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி (டி.ஏ.) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

      தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் க. சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 1.7.17 முதல் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது.

       ஆறாவது மத்திய சம்பள கமி‌ஷன் பரிந்துரைத்த ஊதிய விகிதத்தில் தொடர்ந்து ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 136 சதவீதத்தில் இருந்து 139 சதவீதமாக முன்தேதியிட்டு 1.7.2017 முதல் உயர்த்தி ஆணையிட்டுள்ளது.
      2016–ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குவோருக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு கவனமாக ஆய்வு செய்தது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 1.7.17 முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்கிட முடிவெடுத்துள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 139 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
திருத்தி அமைக்கப்பட்ட அகவிலைப்படி, பகுதிநேர அலுவலர்களுக்கு கிடையாது
        திருத்தப்பட்ட அகவிலைப்படி, அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக்குழு – அனைத்திந்திய தொழில் நுட்ப கல்விக்குழு சம்பள விகிதங்களின் கீழ் சம்பளம் பெறும் அலுவலர்கள், அரசு மற்றும் மானியம் பெறும் பல்தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டய படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள்–உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும், வருவாய் துறையிலுள்ள கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர் அவர்களை சந்தித்து பேசப்பட்டது.





7வது ஊதியக்குழு சில விபரங்கள்..

1.     தர ஊதியம் அகற்றப்பட்டு LEVEL 1 to 32 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 2.      Pay Matrix-ல் பதவி உயர்வில் செல்லும் போது ஒரு LEVEL அடுத்த நிலைக்கு (Horizontal Range) இடதுபுறமாகவும், ஆண்டு ஊதிய உயர்வுக்கு  (Vertical Range) ஒரு STEP கீழாகவும் வைத்து ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும்.

3.      தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதிய நிர்ணயம் செய்திட வழக்கம் போல்3% வழங்கப்பட்டுள்ளது. PAY MATRIX அட்டவணையில் (Vertical Range) இரு STEP கீழாகவும் வைத்து ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும்.

4.      01.01.2016 அல்லது விருப்பம் தெரிவிக்கும் நாளில் அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி எடுத்துக்கொண்டு 2.57 ஆல்பெருக்கப்பட்டு புதிய ஊதியம்  நிர்ணயம் செய்யப்படவேண்டும். இது 01.01.2016 அல்லது அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு நாள் அல்லது அரசாணை வெளியிடப்பட்ட நாளுக்குள் பதவி உயர்வில் சென்ற தேதி ஆகியவற்றில் ஒன்றை விருப்ப நாளாக தெரிவித்திட வேண்டும்.
5.  ஊதிய நிர்ணயம் செய்திட அடிப்படை ஊதியம் + தர ஊதியம் மட்டும் கணக்கில் எடுத்திட வேண்டும். (இடைநிலை ஆசிரியர்கள் பெறும் ரூ.750 தனி ஊதியத்திற்கு தனியாக ரூ. 2000/- தனி ஊதியமாக வைத்திட வேண்டும்).
6. அகவிலைப்படி.
    01-01-2016     =  0 % புதிய அடிப்படை ஊதியத்திற்கு
    01-07-2016     =  2 %                      ”
    01-01-2017     =  4 %                      ”
    01-07-2016     =  5 %                       ”
7. இதர படிகள் ( HRA, CCA) பட்டியல் தனியாக அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
8. இனி ஆண்டு ஊதிய உயர்வுகள் PAY MATRIX அட்டவணையின் படி Vertical Range) ஒரு STEP கீழாகவும் வைத்து ஆண்டுதோறும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ---- தொடரும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக்குழு அரசாணை 303 வெளியிடப்பட்டுள்ளது.

Monday, October 9, 2017

'ஸ்டிரைக்' நாட்களை ஈடுகட்ட 9 வாரம் சனியன்றும் வகுப்பு.

அனைத்து அரசு பள்ளிகளிலும், ஒன்பது வாரம், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, செப்.,ல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தியது. அதனால், பள்ளிகள் இயங்காமல் பாதிக்கப்பட்டன. பல பள்ளிகள் திறந்திருந்தாலும், தலைமை
ஆசிரியர் முதல், வகுப்பு ஆசிரியர் வரை,'ஸ்டிரைக்'கில் பங்கேற்றதால், வகுப்புகள்
நடைபெறவில்லை.

இந்நிலையில், ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடுகட்டி, வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம் முதல், டிச., வரை, ஒன்பது சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள், உத்தரவிட்டு உள்ளனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், 'டெட்' தேர்ச்சி கட்டாயம்.

தனியார் பள்ளி ஆசிரியர் களும், ௨௦௧௯க்குள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.

'தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், ௨௦௧௧ முதல், அனைத்து புதிய ஆசிரியர் களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், 2010ல், வெளியிட்ட அறிவிப்பில், 'புதிய நியமனங்களிலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும்' என, தெரிவித்தது.

'தகுதி தேர்வால், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படும்' என, சிறுபான்மை நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கூடுதல் அவகாசம்

இந்த வழக்கில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, சிறுபான்மை நிறுவனங்கள் தவிர, மற்ற கல்வி நிறுவனங்களில், ௨௦௧௦க்கு பின், பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, ௨௦௧௪ வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இதிலும், பலர் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து, இன்னும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் வழங்
கப்பட்டு, ௨௦௧௯ வரை கூடுதல் அவகாசம் நீடிக்கப்பட்டது. இதனிடையே, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தகுதி தேர்வு

அதில், 'மத்திய அரசின் கல்வியியல் கவுன்சில் மற்றும் தமிழக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அனைத்து பள்ளிகளின் ஆசிரியர் பதவிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். 'இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், 2019, மார்ச், 31க்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

850 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை 60 டி.இ.ஓ.,க்கள் இடமும் காலி-தினமலர்.

       60 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) மற்றும் 850 அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதால் கல்விப் பணி பாதித்துள்ளது.
 மாநில அளவில் 125 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களில், 60 இடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. பதவி உயர்வு பட்டியலில் உள்ள 39 தலைமை ஆசிரியர்களுக்கு டி.இ.ஓ., க்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டும், பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் நலத் திட்டங்கள் வழங்குவது, பள்ளிகள் ஆய்வு, கற்றல் கற்பித்தல் மேற்பார்வை, உதவிபெறும் பள்ளிகளுக்கு சம்பளம் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 2800 அரசு உயர்நிலை பள்ளிகளில், 850க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்த பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலையில் முடிவுக்கு வந்தது. ஆனால், அதுதொடர்பான வழக்கு மதுரை நீதிமன்ற கிளையிலும் உள்ளது. சென்னை உத்தரவை மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர இயக்குனர், செயலர் என யாரும் மூன்று மாதங்களாக அக்கறை செலுத்தவில்லை. இதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியவில்லை.

ஆங்கில வழிக் கல்வி தொடர்பான அரசின் கொள்கை முடிவு தலைமை ஆசிரியர்களுக்கு சரிவர தெரிவிக்கப்படவில்லை. புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கும் பணியில் பாடங்கள் வாரியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழு பட்டியல் விபரத்தை வெளியிட வேண்டும். இக்குழுவில் தகுதி, திறமை, அனுபவமில்லாத ஆசிரியர் சிலர் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் கல்வி அதிகாரிகள் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். காலாண்டு தேர்வு முடிந்த நிலையிலும் நிரப்பப்படாத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் முழுவதையும், வெளிப்படையாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, October 6, 2017

டிசம்பருக்குள் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினிமயமாக்கம் : முதன்மை செயலர் தகவல்.

        ''டிசம்பருக்குள் தமிழகத்திலுள்ள ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் (சர்வீஸ் ரிக்கார்டு) கணினிமயமாக்கப்படும்,'' என, கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: திறந்த வெளிப்படையான விரைவான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணி நடக்கிறது. இதுவரை, 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. தற்போதைய நடைமுறையின்படி பணிப்பதிவேடுகளை பராமரிப்பதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
ஒரு அரசு ஊழியர் அவரது பணிப்பதிவேட்டை முறையாக கவனித்திருக்க இயலாது. அவர் ஓய்வு பெறும் நிலையில் ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகத்தில் சம்பள விவரங்களை பதிவு செய்ய விடுபட்டிருந்தால், அவர் அந்த அலுவலகத்திற்கு சென்று அதை சரி செய்ய வேண்டும்.
இதனால் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க முடியாத நிலை ஏற்படும். கணினிமயமாக்குவதன் மூலம், உடனுக்குடன் இதுபோன்ற குறைகளை சரி செய்ய முடியும்.
வங்கி கணக்குகளை அலைபேசியில் வாடிக்கையாளர்கள் பார்த்து கொள்வதை போல, அரசு ஊழியர்கள் தங்கள் அலைபேசியில் பணிப்பதிவேடு பதிவுகளை பார்த்து கொள்ளலாம். ஊழியர்கள் குறித்து வயது, பணி அனுபவம் என ஏதாவது ஒரு அடிப்படையில் கணக்
கெடுக்க அரசு உத்தரவிடும் போது, தற்போது மூன்று நாட்களுக்கு மேலாகி
விடுகிறது.
கணினிமயமாக்குவதால், உடனுக்குடன் கணக்கெடுத்து விட முடியும். இதுகுறித்து அடுத்த வாரம் திருநெல்வேலி, திண்டுக்கல்லில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது, என்றார்.

அரசு ஊழியருக்கு 20 சதவீத சம்பள உயர்வு?

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு, தீபாவளிக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப் பட்டதும், தமிழக அரசு
ஊழியர்களுக்கும் மாற்றி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி பிப்., 22ல் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க அலுவலர் குழு அமைத்து, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

குழு அறிக்கை அடிப்படையில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை அடுத்த வாரம் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, September 24, 2017

ஊரகப்பகுதிகளில் அரசு மற்றும் சமுதாய கட்டிடங்களை பராமரித்தல் - அரசாணை.






எமிஸ்' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு

மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்' இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது.

புதிய முகவரி

சென்னை, அண்ணா பல்கலை தொழில்நுட்ப உதவியுடன், பள்ளிக்கல்வித் துறையே, 'எமிஸ்' இணையதளத்தை பராமரித்தது. தற்போது, அந்த பொறுப்பு, தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது.இதையடுத்து, புதிய இணையதள முகவரி தரப்பட்டு, அனைத்து பள்ளிகளும், இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் என, கல்வித் துறை அறிவித்தது.
ஆனால், புதிய இணைய தளத்தில், தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது. இரு நாட்களாக, இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:'எமிஸ்' திட்டத்தில், மாணவர் பெயர், ரத்தப் பிரிவு, பெற்றோர் விபரம், மொபைல் போன் எண், ஆதார் எண், வங்கி கணக்கு எண், குடும்ப உறுப்பினர் விபரம் என, பல தகவல்களை சேகரிக்க வேண்டும். ஏற்கனவே, ௨௦௧௧ - ௨௦௧௬ வரை, இந்த தகவல்களை இணையதளத்தில் இணைத்துள்ளோம்.
அழுத்தம்

தற்போது, மீண்டும், புதிய இணையதளத்தில் புதிதாக இணைக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், புதிய இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.
அதிகாரிகளோ, கால அவகாசம் கொடுத்து,தகவல்களை பதிவேற்றம் செய்ய, அழுத்தம் தருகின்றனர். ஆனால், இணைய தள தொழில்நுட்பக் கோளாறு, இன்னும் சரி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள். - தினமலர்.

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர்.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.

இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பில், 2019க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், 1,200மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், 50 சதவீதமான, 600 மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆய்வின் முடிவில், 50 சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பில் சேர்க்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும், 50 சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. அதனால், 'பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது' என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

Friday, September 22, 2017

இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் இதர விலையில்லா பொருட்கள் விநியோகம் -, போக்குவரத்து செலவினம் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.



வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது-ஐகோர்ட்டு

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. ஆசிரியர்கள் பெருமளவில் போராட்டத்தில் பங்கேற்றதால் மாணவர்களும் பாதிக் கப்பட்டனர்.

மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் (ஜாக்டோ-ஜியோ) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்து, கடந்த 7-ந்தேதி உத்தரவிட்டது.

ஆனாலும் கோர்ட்டு உத்தரவை மீறி ஏராளமான அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வந்தனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கடந்த 15-ந்தேதி ஆஜரானார் கள்.
விசாரணை முடிவில், ஜாக்டோ-ஜியோ சங்கங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விசாரிக்க தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் சுப்பிர மணியன், ஜான், மோசஸ் ஆகியோர் ஆஜரானார்கள்.

முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

“7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான குழு தனது அறிக்கையை வருகிற 30-ந்தேதி அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது எத்தனை நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று அக்டோபர் 13-ந்தேதிக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது. பிடித்தம் செய்திருந்தால் திரும்ப வழங்க வேண்டும்.போராட்டத்தில் ஈடுபட்ட வேலை நாட்களை அரசு ஊழியர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றி ஈடுசெய்ய வேண்டும்.”

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Thursday, September 21, 2017

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு- தினமலர்

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 2014ல், அவகாசம் முடிந்தும், ஏராளமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால், அவகாசத்தை, 2019 வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய திறந்த நிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., அமைப்பில், டிப்ளமா கல்வியியல் படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெறாதோர், என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டுஉள்ளது.
எனவே, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 65 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழ்களை சரிபார்க்குமாறு, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதில், 50 சதவீத தேர்ச்சி பெறாதோர், மத்திய அரசின் படிப்பை, 2019 மார்ச், 31க்குள் முடிக்காவிட்டால், பணியில் இருந்து நீக்கப்படுவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 20, 2017

DEEO - PA க்களுக்கு 22-09-2017 அன்று நிர்வாக திறன் மேம்படுத்துதல் பயிற்சி நடைபெறுகிறது.


உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை.

மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

ஊதிய உதவிகள் : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இவர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஊதிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிதியை பயன்படுத்தி, ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது.
மத்திய அரசு உத்தரவுப்படி, பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், மூன்று ஆசிரியர்கள்; 50 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். இப்படி, மாணவர் விகிதத்தை விட, ஆசிரியர் விகிதம் அதிகமாக இருப்பதால், அரசு நிதி விரயமாகிறது. இதை தடுக்க, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் என்ற விதியின் கீழ், இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு - தினமலர்.

சென்னை: 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: கடந்த, 2004 டிச., 1ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, அரசு பணியாளர்கள் அனைவரும், அலுவலக நேரத்தில், அவர்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, தவறாமல் அணிய வேண்டும் என, 2013ல் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அரசு பணியாளர்கள், அலுவலக நேரங்களில், அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளன. எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும், அரசாணையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். துறையின் செயலர்கள், கலெக்டர்கள், இது தொடர்பாக தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதே போல, ஆசிரியர்களும், பள்ளிகளில் அடையாள அட்டை அணிந்து பணிபுரியும்படி, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Thursday, September 14, 2017

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் .

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக அரசு பள்ளிக்கூட மாணவர் கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பணியை தவிர்த்து மற்ற பணிகளை மேற்கொள்வதாகவும், இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழன்பன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆசிரியர் சங்கங்களை ஏன் தடை செய்யக் கூடாது, ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகைப்பதிவை ஏன் அமல் படுத்தக்கூடாது என்பது உள்பட 20 கேள்விகளை கேட்டு அதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

பாராட்டு

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு ஆசிரியர்கள் பணி சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பியதன் மூலம் அரசு பள்ளியில் ஆசிரியர் பணியை மேற்கொள்ளாமல் மற்ற பணிகளை மேற்கொண்டு வந்த ஆசிரியர்கள் முறையாக தங்களது பணியை மேற்கொள்வது தெரியவந்துள்ளது.

அரசு பள்ளியில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது. தவறு செய்யும் ஆசிரியர்களுக்கே இந்த கோர்ட்டு பல கேள்விகளை எழுப்பி உள்ளது’ என்றார்.

வெட்கி தலைகுனிய வேண்டும்

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘நீட்’ தேர்வால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி, அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற ஒரு நிலையை பார்த்து அரசு பள்ளி ஆசிரியர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றும் கூறினார்.
ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாமல், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் வரும் காலத்தில் எந்த காரணத்திற்காகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாதபடி உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும், இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

ஆசிரியர் சங்கங்களை முறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டதாகவும், கோர்ட்டு உத்தரவை விமர்சிக்கும் ஆசிரியர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்த நீதிபதி ஆசிரியர்கள் போராட்டம் சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பி உள்ளார். அது வருமாறு:-

* எத்தனை ஆசிரியர் சங்கங்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளன?.

* எத்தனை ஆசிரியர்கள் பணியை புறக்கணித்துள்ளனர்?.

* தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்?.

* தமிழக மக்கள் தொகையில் ஆசிரியர் விகிதாச்சாரம் எவ்வளவு?.

* ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்சம் ஊதியம், அதிகபட்ச ஊதியம் எவ்வளவு?.

* பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது?. தமிழக பட்ஜெட்டில் அது எத்தனை சதவீதம்?.

அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

* தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் எத்தனை பேர் உள்ளனர்?. அவர்களின் ஆண்டு சராசரி வருமானம் எவ்வளவு?.

* தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறதா?.

* ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பாதிப்பு அடைந்துள்ள பள்ளிகள் எத்தனை?

* போராட்டத்தை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?.

மேற்கண்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி இன்று (வியாழக்கிழமைக்கு) தள்ளிவைத்தார்.

நிபுணர் குழு
இதற்கிடையே ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்க தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னையை சேர்ந்த வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
 

Tuesday, September 12, 2017

11-09-2017 அன்று போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் பெயர் விபரம் கேட்பு.



மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் - தினமலர்.

மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில் செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது
அவசியம்' என, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு பி.எட். படித்தவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றுகின்றனர். ஆனால் தனியார் மெட்ரிக் மற்றும் மழலையர் பள்ளிகளில் பட்ட படிப்புடன், பி.எட். படித்து, தகுதி தேர்வின்றி பணியாற்றுகின்றனர்.
இவர்கள் மழலையர் பள்ளி மற்றும் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்த அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனாலும் அவர்கள் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

புதிய பாடத்திட்டம்: இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை முறைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை, ஆசிரிய பணியாற்றுவோரின் கற்பித்தல் திறனை மேம்படுத்த துவக்க கல்வியில்
டிப்ளமோவை (டிப்ளமோ இன் எலிமென்ட்ரி எஜூகேஷன்) தபால் வழியில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கான பாடத் திட்டங்களை 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்' (என்.ஐ.ஓ.எஸ்.) வழங்குகிறது. இத்திட்டத்தில் செப்.15க்குள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவோர் சேர வேண்டும். இவர்களுக்கு அக்டோபர் முதல் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.ஆன்-லைன் விண்ணப்பம்: இக்கல்வியில் சேர விரும்புவோர் dled.nios.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் சேர்ந்து படிப்பவர்கள் மட்டுமே மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை செய்யலாம். இக் கல்வி திட்டத்தில் சேராமல், பணி செய்வது கண்டறியப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் மெட்ரிக் பள்ளிகளை எச்சரித்துள்ளனர்.

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு, 'கெடு- தினமலர்.


வேலை நிறுத்தம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு, தமிழக அரசு கெடு விதித்துள்ளது,

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், செப்., ௭ முதல், காலவரையற்ற போராட்டம் துவங்கியுள்ளது.
'வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
தேர்வு பாதிப்பு
அதனால், பள்ளி, கல்லுாரிகளில் வகுப்புகளும், பள்ளிகளில் காலாண்டு தேர்வு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், போராட்டத்தை தடுப்பது குறித்து, தமிழக தலைமை செயலர், கிரிஜாவைத்தியநாதன் தலைமையில், உயர் அதிகாரிகள், நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.
'எஸ்மா' எனப்படும், அத்தியாவசிய பணிகள் சட்டத்தின், ஒரு பகுதியை மட்டும் அமலுக்கு கொண்டு வரலாமா; அதற்கு முன் விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கலாமா என, விவாதிக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, முதல் கட்ட எச்சரிக்கை விடுக்க முடிவானது. இதன்படி, பள்ளிக் கல்வி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக, சங்க நிர்வாகிகளிடம் தனித்தனியாக பேச்சுநடத்தப்படுகிறது.
போராட்டத்தில் பங்கேற்றுள்ள, 95 சங்கங்களின் மாநில தலைவர்கள், பொதுச்செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சங்கத்திற்கும், அரசு தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாளில் பணிக்கு திரும்பாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.'

Friday, May 19, 2017

இன்று 19-05-2017 AEEO மாறுதல் ,பணி மாற்றம் நடைபெற உள்ளது

இன்று நடைபெறும் AEEOமாறுதல் கலந்தாய்வு கடந்தாண்டை போன்று ஒளிவு மறைவு இன்றி அனைத்து காலிப்பணியிடங்களும் online இல் நடைபெற உள்ளது. மூன்றாண்டுகள் முடிவுற்றுள்ள பணியிடங்கள் அனைத்தும் ஏறத்தாழ 127 உள்ளன.  MHM TO AEEO 200 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் 2பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.எந்த காலிப்பணியிடங்களும் மறைக்கப்படாமல் காட்டப்பட உள்ளது.எவ்வித விசாரணையும் இன்றி கட்டாய BACK to School - (நிர்வாகம்) வழங்கக்கூடாது என பொதுச்செயலாளர் முயற்சி எடுத்துள்ளார். பணியாற்றிய ஒன்றியங்களுக்கு மீண்டும் மாறுதல் கோரலாம். மாறுதல் பெற ஓராண்டு பணியாற்றி இருக்க வேண்டும்.ஏறத்தாழ 50 பேர் பணிமாறுதல் மூலம் AEEOஆக பணிமாறுதல் வாய்ப்பு பெற உள்ளனர். அனைவருக்கும் தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள்.

Friday, April 28, 2017

கல்வி அதிகாரிகளுக்கு கோடை கொண்டாட்டம்- தினமலர்.

மாணவர்களை தயார்படுத்த, சி.இ.ஓ., - டி.இ.ஓ., போன்ற கல்வித் துறை அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட பயிற்சி அளிக்கப் படுகிறது. புதிய கல்வி ஆண்டில், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும். அதனால், அவர்களுக்கு பயிற்சி அளித்து, பின், மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட ஆளுமை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மே, 3 முதல், 6 வரை, மதுரையில் சிறப்பு புத்தாக்க பயிற்சி நடக்கிறது. இதில், பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணன், டாக்டர் அமுதா ஹரி, ஒடிசா அரசின் கூடுதல் தலைமை செயலர், ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர், ச.மாடசாமி, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இந்த மூன்று நாள் பயிற்சியில் அதிகாரிகளுக்கு, அறுசுவை விருந்து, கலந்துரையாடல், விவாதம், நகைச்சுவை சொற்பொழிவு, சிலம்பம், கராத்தே, புத்தாக்க விளையாட்டுகள் போன்றவை இடம் பெற உள்ளன. பயிற்சி நிறைவு விழாவில், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
ஜூனில், புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, மாணவர்களை நெறிப்படுத்த, ஆசிரியர்களும், அதிகாரிகளும் புத்துணர்ச்சியுடன் தயாராக வேண்டும். 'நீட்' போன்ற பல போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அதற்கேற்ப, ஆசிரியர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, April 8, 2017

திருச்சியில் 09-04-2017 அன்று விரைவு மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

            நாளை 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

நாள்: 09.04.2017

நேரம்: காலை 10 மணி

இடம்: ஜான் பிரிட்டோ நடுநிலைப்பள்ளி,
             சேதுராமன் பிள்ளை காலணி பேருந்து நிறுத்தம் அருகில்
             T.V.S. டோல்கேட் 
             திருச்சிராப்பள்ளி.

            எதிர்வரும் 21-04.2017 அன்று  சென்னையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டு அழைப்பிதழ், சுவரொட்டிகள் திருச்சி செயற்குழுவில் வழங்கப்பட உள்ளது. எனவே மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கான அழைப்பிதழ்கள், சுவரொட்டிகளை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாநில மாநாட்டுக்கு அளிப்பதாக உறுதியளித்த பங்குத்தொகையினை திருச்சி செயற்குழுவில் மாநில பொருளாளர் திரு. ப.மாதவராஜன் அவர்களிடம் மாவட்ட செயலாளர்கள் வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                                                         இவன்
                                                                             மாநில அமைப்பு

சென்னையில் நடைபெற உள்ள மாநில மாநாடு அழைப்பிதழ்