மதுரை: பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் 80 இடங்களை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை காதக்குறிச்சி தமிழரசன் தாக்கல் செய்த மனு: பி.எஸ்.சி., -பி.எட்., படித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 150 க்கு 92 மதிப்பெண் பெற்றேன். இதனால், பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி பெற்றேன். 2014 மே 30 ல் தமிழக அரசு, 'பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்., படிப்பிற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். அதனடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்,' என உத்தரவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வி முறை வேறு; அதிக மதிப்பெண் பெறுவது கடினம். அரசு உத்தரவில் பணிமூப்பு, அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவில்லை. எனக்கு 20 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ளது.
தகுதித் தேர்வில் 92 மதிப்பெண் வாங்கினாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் 59.08 ஆக குறைந்து விட்டது. இதனால், ஆசிரியர் பணி வாய்ப்பு பறிபோய் விட்டது. தகுதித் தேர்வு அடிப்படையில், எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டார்.இதுபோல மேலும் பலர் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு எதிராக மனுக்கள் செய்தனர்.தனிநீதிபதி இடைக்கால உத்தரவில், "கவுன்சிலிங் நடத்த தடையில்லை. பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால், பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது,” என்றார்.
தனி நீதிபதியின் உத்தரவு அடிப்படையில், 14 மனுக்கள் மீது மட்டும் நேற்று முன்தினம் அரசுத்தரப்பில், ' வெயிட்டேஜ் மதிப்பெண் சரியான நடைமுறைதான். இதற்கு எதிரான மனுக்களை சென்னை ஐகோர்ட் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீடு செய்யப்பட்டது. ஐகோர்ட் பெஞ்ச், 'தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது,' என்றார்.
நீதிபதி கே.கே.சசிதரன் நேற்று பிரதான மற்றும் நிலுவையில் உள்ள பிற மனுக்களை விசாரித்தார்.கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன்," மனுதாரர்களின் நலன் கருதி, நியமனத்தில் 80 இடங்கள் காலியாக வைக்கப்படும். நியமன நடைமுறை தொடர அனுமதிக்க வேண்டும்,” என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி உத்தரவு: அரசுத் தரப்பு தெரிவித்தபடி 80 ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைக்க வேண்டும். சென்னை ஐகோர்ட் பெஞ்ச் உத்தரவுப்படி, நியமன நடைமுறைகளை தொடர டி.ஆர்.பி., விரும்புகிறது. மனுதாரர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் நியமன நடைமுறையில் தலையிட விரும்பவில்லை. நியமன நடைமுறை தொடரலாம். விசாரணை அக்.,7 க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றார்.
புதுக்கோட்டை காதக்குறிச்சி தமிழரசன் தாக்கல் செய்த மனு: பி.எஸ்.சி., -பி.எட்., படித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 150 க்கு 92 மதிப்பெண் பெற்றேன். இதனால், பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி பெற்றேன். 2014 மே 30 ல் தமிழக அரசு, 'பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்., படிப்பிற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். அதனடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்,' என உத்தரவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வி முறை வேறு; அதிக மதிப்பெண் பெறுவது கடினம். அரசு உத்தரவில் பணிமூப்பு, அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவில்லை. எனக்கு 20 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ளது.
தகுதித் தேர்வில் 92 மதிப்பெண் வாங்கினாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் 59.08 ஆக குறைந்து விட்டது. இதனால், ஆசிரியர் பணி வாய்ப்பு பறிபோய் விட்டது. தகுதித் தேர்வு அடிப்படையில், எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டார்.இதுபோல மேலும் பலர் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு எதிராக மனுக்கள் செய்தனர்.தனிநீதிபதி இடைக்கால உத்தரவில், "கவுன்சிலிங் நடத்த தடையில்லை. பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால், பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது,” என்றார்.
தனி நீதிபதியின் உத்தரவு அடிப்படையில், 14 மனுக்கள் மீது மட்டும் நேற்று முன்தினம் அரசுத்தரப்பில், ' வெயிட்டேஜ் மதிப்பெண் சரியான நடைமுறைதான். இதற்கு எதிரான மனுக்களை சென்னை ஐகோர்ட் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீடு செய்யப்பட்டது. ஐகோர்ட் பெஞ்ச், 'தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது,' என்றார்.
நீதிபதி கே.கே.சசிதரன் நேற்று பிரதான மற்றும் நிலுவையில் உள்ள பிற மனுக்களை விசாரித்தார்.கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன்," மனுதாரர்களின் நலன் கருதி, நியமனத்தில் 80 இடங்கள் காலியாக வைக்கப்படும். நியமன நடைமுறை தொடர அனுமதிக்க வேண்டும்,” என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி உத்தரவு: அரசுத் தரப்பு தெரிவித்தபடி 80 ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைக்க வேண்டும். சென்னை ஐகோர்ட் பெஞ்ச் உத்தரவுப்படி, நியமன நடைமுறைகளை தொடர டி.ஆர்.பி., விரும்புகிறது. மனுதாரர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் நியமன நடைமுறையில் தலையிட விரும்பவில்லை. நியமன நடைமுறை தொடரலாம். விசாரணை அக்.,7 க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றார்.