தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Monday, September 26, 2016
Monday, September 19, 2016
பொதுச்செயலாளர் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். முழு ஓய்வில் உள்ளார்.
நமது பொதுச்செயலாளர் அவர்கள் அறுவைசிகிச்சைக்கு பிறகு கடந்த 17.09.2016 அன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கடவுள் அருளால் நலமுடன் உள்ளார். மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்துள்ளதால் தொடர்ந்து முழு ஓய்வு தேவைப்படுவதாலும், நோய்த்தொற்றினால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவும் மேலும் 20 நாட்களுக்கு யாரும் நேரில் சந்திக்க வரவேண்டாம் என அவருடைய குடும்பத்தினர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர் உடல் நலம் நம்மை சந்தித்து பேசும் அளவிற்கு முன்னேற்றம் வந்தவுடன் அனைவருக்கும் தெரிவிக்கிறோம். எனவே பொதுச்செயலாளரின் உடல் நலன் கருதி நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட
வேண்டும் என்று மாநில அமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Sunday, September 11, 2016
பொதுச்செயலாளர் திரு. சி.பாஸ்கரன் அவர்கள் நலமாக உள்ளார்.அவர் நலம் பெற இறைவனை வழிபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
சென்னையில் கடந்த 08-09-2016 அன்று நடைபெற்ற மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நமது பொதுச்செயலாளர் நலமாக உள்ளார். அவர் தொடர்ந்து விரைவாக நலம் பெற்று வருகிறார் என்ற தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளதாலும், ஒரு மாத காலத்திற்கு நன்கு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாலும், அவரை நேரில் பார்ப்பதையும், தொலைபேசியில் தொடர்பு கொள்வதையும் அனைவரும் தவிர்த்திட அவருடைய குடும்பத்தினர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அவர் நலம் பெற இறைவனை வழிபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
Monday, September 5, 2016
Subscribe to:
Posts (Atom)