நமது பொதுச்செயலாளர் அவர்கள் அறுவைசிகிச்சைக்கு பிறகு கடந்த 17.09.2016 அன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கடவுள் அருளால் நலமுடன் உள்ளார். மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்துள்ளதால் தொடர்ந்து முழு ஓய்வு தேவைப்படுவதாலும், நோய்த்தொற்றினால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவும் மேலும் 20 நாட்களுக்கு யாரும் நேரில் சந்திக்க வரவேண்டாம் என அவருடைய குடும்பத்தினர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர் உடல் நலம் நம்மை சந்தித்து பேசும் அளவிற்கு முன்னேற்றம் வந்தவுடன் அனைவருக்கும் தெரிவிக்கிறோம். எனவே பொதுச்செயலாளரின் உடல் நலன் கருதி நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட
வேண்டும் என்று மாநில அமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment