தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Sunday, September 29, 2013
Wednesday, September 25, 2013
Sunday, September 22, 2013
22-09-2013 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானங்கள்.
1. அரசாணை 182 வெளியிட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இது நாள்
வரை நடைமுறைப்படுத்திடாத நிலையை மாநில செயற்குழு மிகவும்
கவனத்துடன் விவாதித்தது. 182 அரசாணையை உடனே அமுல்படுத்தி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு 3% உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் உடனே
வழங்கிட மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
2. காலாண்டுத்தேர்வு முடிவடைந்த
நிலையில் இதுநாள் வரை 380 உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாணவர் கல்வி நலன் கருதி விரைவில் நீதிமன்ற தடையாணையை நீக்கி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
கலந்தாய்வு நடத்திட இம்மாநில செயற்குழு
கேட்டுக்கொள்கிறது.
3. உதவி தொடக்கக்கல்வி
அலுவலர்கள் மீது பெறப்படும் உண்மையில்லாத புகாரின் மீதுகூட நடவடிக்கை என்பதை கைவிட்டு புகார் பெறப்பட்டால் இயக்குநர்
அளவில் விசாரணை மேற்கொண்டு புகாரின்
உண்மைத்தன்மைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க இம்மாநில செயற்குழு
கேட்டுக்கொள்கிறது.
4. அனைத்து AEEO அலுவலகங்களுக்கும் வலைதள வசதியுடன் கூடிய கூடிய தொலைபேசி இணைப்பு
வழங்கிட வேண்டுமாய் இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
5. சங்கத்திற்காக வலைதள விலாசம்
ஏற்படுத்திக் கொடுத்த திருச்சி தமிழ்ச்செல்வன் மற்றும்
அவர்களுடைய நண்பர்களுக்கு இம் மாநில செயற்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
6. அனைத்து AEEO அலுவலகங்களுக்கும் கணினி தட்டச்சு பணியாளரை நியமித்திட இம் மாநில
செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
7. இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்து
தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடத்தில் தேர்வுநிலை பெறாமல் நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்று பணிமாறுதல் மூலம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உரிய ஊதியவிகிதம் 4(3) மூலம் நிர்ணயம் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்திடுமாறு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
குறிப்பு.
( உதவி தொடக்கக்கல்வி
அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்துவது சார்ந்த கோப்பு அரசின் பரிசீலனையில் இருப்பதால் இப்பொருள்
சார்ந்து தீர்மானம்
நிறைவேற்றவில்லை.)
Thursday, September 12, 2013
உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் மாதாந்திர ஆய்வு மற்றும் பள்ளிப்பார்வை - தொடக்கக்கல்வி இயக்குநரின் உத்தரவு.
உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் மாதாந்திர பள்ளிகள் ஆய்வு மற்றும் பார்வை குறித்து மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவு உண்மையின் உரைகல்லாக அமைந்துள்ளது. இதனால் பள்ளிப்பார்வை மற்றும் ஆண்டாய்வு என்பது தரமானதாகவும், முழுமையாகவும் அமையும் என்பதோடு, ஒரு தரமான கல்வியை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைத்திட மாண்புமிகு முதல்வர் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றிட ஏதுவாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆசிரியர்களின் பணப்பயன்கள் உடன் கிடைத்திடவும், அலுவலகப்பணிகளில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்த்திடவும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
உண்மை நிலையை உணர்ந்து உத்தரவிட்ட மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலர் அவர்களையும் பாராட்டுகிறோம்.
Subscribe to:
Posts (Atom)