உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் மாதாந்திர பள்ளிகள் ஆய்வு மற்றும் பார்வை குறித்து மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவு உண்மையின் உரைகல்லாக அமைந்துள்ளது. இதனால் பள்ளிப்பார்வை மற்றும் ஆண்டாய்வு என்பது தரமானதாகவும், முழுமையாகவும் அமையும் என்பதோடு, ஒரு தரமான கல்வியை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைத்திட மாண்புமிகு முதல்வர் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றிட ஏதுவாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆசிரியர்களின் பணப்பயன்கள் உடன் கிடைத்திடவும், அலுவலகப்பணிகளில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்த்திடவும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
உண்மை நிலையை உணர்ந்து உத்தரவிட்ட மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலர் அவர்களையும் பாராட்டுகிறோம்.
No comments:
Post a Comment