பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, February 16, 2014

அரசு ஊழியர்களுக்காக போடப்பட்ட தமிழக பட்ஜெட்! - தினமலர்- நன்றி.


       கடந்த, 13ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 'ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி யிடத்தாற் செயின்' என்ற, சிறப்பான திருக்குறள் இடம் பெற்றிருந்தது. காலத்தையும், இடத்தையும் அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டால், உலகமே கைகூடும் என்பது, அதன் பொருள்.
               குறளுக்கு ஏற்ப, இந்த கால கட்டத்தில், தமிழகத்திற்கு தேவையானதை அறிந்து தான், பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.தமிழகத்தில், 7.50 கோடி பேர் உள்ளனர். 2014 - 15ம், நிதி ஆண்டில், 1.02 லட்சம் கோடி ரூபாயை, தமிழக அரசுக்கு, நாம் வரியாகச் செலுத்த உள்ளோம். இந்தப் பணம், ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும், நம் நலனுக்காகவும் செலவிடப்பட உள்ளது என்ற நம்பிக்கையில், நாம் வரி செலுத்துகிறோம். அவ்வாறு நடக்கிறதா?
சம்பளத்திற்கே செலவாகிறது:

       பட்ஜெட்டில், 40 சதவீத பணம், தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காகச் செலவிடப்படுகிறது; இவர்களின் எண்ணிக்கை, 10 - 12 லட்சம்.மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, அரசு ஊழியர்களுக்காகச் செலவிடப்படுவது, தமிழகத்தில் தான் மிக அதிகம். (இதற்கு மேலும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, பணிகள் நடக்கும் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது, பெரும் துரதிருஷ்டம்)மேலும், 17 சதவீத பணம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு போய்விடுகிறது. இவர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ, 7 லட்சம். அதாவது, 57 சதவீத வரிப் பணம், குறைந்த எண்ணிக்கையில் உள்ள, இவர்களுக்குப் போய் சேருகிறது.இது தவிர, 13 சதவீத பணம், அரசு வாங்கியுள்ள கடன்களுக்காக வட்டி செலுத்துவதற்கும், 10 சதவீத பணம், அரசு இயந்திரங்களை இயக்குவதற்கும் செலவிடப்படும். சுருக்கமாகச் சொன்னால், வரி வருவாயில், 80 சதவீத பணம் அரசை இயக்குவதற்கு மட்டுமே செலவிடப்படுகிறது.இதெல்லாம் போகத்தான், பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு, மானியங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அப்போது, எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான சாலைகள், மின் நிலையங்கள், அணைகள், கால்வாய்கள் போன்ற உள்கட்டமைப்புகளை, எந்த நிதியில் இருந்து உருவாக்குவது? மக்களின் நலனைப் பேணத் தேவையான மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றை எந்த நிதியில் இருந்து கட்டுவது?அத்தகைய தொலைநோக்கு திட்டங்களை, அரசு மறந்துவிட்டதாக நினைக்க வேண்டாம். 2014 - 15ம் நிதி ஆண்டில், 25 ஆயிரம் கோடி ரூபாய், மூலதன செலவு செய்யப்படும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதற்காக, 21 ஆயிரம் கோடி ரூபாயை, தமிழக அரசு, கடனாக வாங்கப் போகிறதாம். வருமானத்தை புளிசேரி வைத்து, மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு, உடுத்த உடை வாங்க கடன்.அடுத்த ஆண்டு, இந்த மூலதன செலவால் வருவாய் வருகிறதோ, இல்லையோ, வாங்கிய கடனுக்கு, கண்டிப்பாக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும்.
எங்கிருந்து வரும் நிதி?

         இதுவரையில் பட்டியலிட்டதிலேயே கடன் வாங்கும் நிலை; இதற்கும் மேலாக, 52 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மானியங்களும், இலவசங்களும் வழங்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இதில் தான், உணவு மானியம், லேப்-டாப், கல்வி, சுகாதாரம், மிக்சி, கிரைண்டர், வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்படும். இதற்கு எங்கிருந்து நிதி வரப்போகிறது?மானியம், கட்டாய செலவு, கடன், வட்டி, பற்றாக்குறை, மேலும் கடன், மேலும் மானியம், மேலும் பற்றாக்குறை; இது, தமிழகத்தை, நீர்க்குமிழியில் சிக்க வைப்பதற்கு சமம். இந்த கட்டமைப்பு, 10 - 11 ஆண்டுகளாக மாறவில்லை. சென்ற அரசு, இலவசமாக, 'டிவி' கொடுத்தது; இந்த அரசு, மிக்சி, கிரைண்டர் கொடுக்கிறது.ஆனால், தமிழக மக்களின், வாழ்க்கை முறை மேம்படவில்லை. அதற்கு, அரசியல்வாதிகள் மட்டுமே குற்றவாளிகள் என, சொல்லி, நான் அரசியலை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. தமிழக மக்கள், இலவசத்திற்கு அடிமையாகி விட்டனர்.அதனால் தான், நம் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய பெரிய தொலை நோக்கு திட்டங்கள் அறிவிக்கப்படுவதில்லை. மாறாக, தமிழக மக்களை, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், விவசாயிகள், மீனவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பெண் குழந்தைகள், மாணவர்கள், ஆண் - பெண் என, எண்ணற்ற பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவினருக்கும்
தனித்தனியாக, 'நல திட்டங்கள்' வகுக்கப்படுகின்றன.இது தேர்தல் நோக்கோடு செய்யப்படும் விஷயம். அதனால், சம்பந்தப்பட்ட பிரிவினரின் வாழ்க்கை மேம்பட்டதா என்பது, அரசுக்கு முக்கியம் அல்ல, மாறாக, 'அரசு எனக்காக, என்னுடைய பிரிவினருக்காக செய்திருக்கிறது' என்ற எண்ணத்தை, திட்டப் பயனாளிகள் மத்தியில் உருவாக்குவது தான் அரசுக்கு முக்கியம்.ஜாதி, மதம், இனம், மொழி போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட, அற்புதமான ஓட்டு வங்கி, அரசு ஊழியர்கள். அவர்களும், அவர்களது குடும்பத்தாரும் சேர்ந்து, 50 லட்சம் ஓட்டுகளுக்கு உரிமையாளர்கள். அதனாலேயே, பட்ஜெட்டில், அவர்கள் கணிசமாகக் கவனிக்கப்படுகின்றனர்.
'பஞ்சுமிட்டாய்' வேண்டாம்:

       அரசு ஊழியர் ஓட்டு வங்கியை உருவாக்கிய பெருமை, முன்னாள் முதல்வர் கருணாநிதியை மட்டுமே சாரும். இப்படி குறைந்த சதவீத அளவில் உள்ள மக்களுக்காக போடப்படும் பட்ஜெட் மாற வேண்டுமானால், சராசரி, தமிழன் சிந்திக்க வேண்டும். பெரும் வளர்ச்சிக்கு, தமிழன் ஆசைப்பட்டால், பஞ்சு மிட்டாய் போல் தரப்படும், இலவசங்களை தூக்கி எறிய வேண்டும்.இதில், அரசியல்வாதிகளை குற்றம் சொல்வதில் பயன் இல்லை. மக்கள் தான் திருந்த வேண்டும். தமிழகம், முன்னேற்ற பாதையில் செல்வதற்கு பெரும் தொலைநோக்கு திட்டங்களும், மூலதன செலவுகளும் தேவை. அவற்றுக்கு முக்கியத்துவம் தரும் அரசை, உருவாக்குவதற்கான கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.

எம்.ஆர். வெங்கடேஷ் ,
பட்டய கணக்காளர் மற்றும் பொருளாதார நிபுணர்,
mrv10000@gmail.com

ஆசிரியர் தேர்வில் 'வெயிட்டேஜ்' வழங்கும் முறைக்கு எதிர்ப்பு: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை: பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் முறைக்கு, எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுக்களுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'வெயிட்டேஜ்' மதிப்பெண்:

சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த, பிரியவதனா என்பவர், தாக்கல் செய்த மனு: நான், பி.ஏ., ஆங்கில இலக்கியத்தில், 64.5 சதவீதம், பி.எட்., படிப்பில், 82 சதவீதம் பெற்றுள்ளேன். எம்.ஏ., ஆங்கில இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வில், 104 மதிப்பெண் பெற்றேன். கடந்த மாதம் நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன்; நியமனத்துக்காக காத்திருக்கிறேன். ஆசிரியர் தேர்வுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் முறையை பின்பற்ற, தேர்வு வாரியத்துக்கு, பள்ளி கல்வித் துறை, 2012, அக்டோபரில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2க்கு, 10; பட்டப் படிப்புக்கு, 15; பி.எட்., படிப்புக்கு, 15; ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 60 என, மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்களில், 'ஸ்லாப்' முறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறை மூலம், தகுதி தேர்வில், 90 மதிப்பெண் எடுத்தவருக்கும், 104 மதிப்பெண் எடுத்தவருக்கும், ஒரே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், 42 என, வழங்கப்படுகிறது. இப்படி, வெவ்வேறு மதிப்பெண்களை எடுத்தவர்களை, ஒரே, 'குரூப்'பின் கீழ் கொண்டு வருவது சரியல்ல. அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி ஆனவர்களுக்கும், குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சியானவர்களுக்கும், ஒரே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிப்பது நியாயமற்றது. ஒவ்வொரு படிப்பிலும், ஒருவர் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளாரோ, அதன் அடிப்படையிலே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க வேண்டும். போட்டி தேர்வைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் முறைக்கு தடை விதிக்க வேண்டும்; அதை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

28ம் தேதிக்கு...:


இதுபோன்று, மேலும், இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள், நீதிபதி சுப்பையா முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் நமோ நாராயணன் வாதாடினார். மனுக்களுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இம்மாதம், 28ம் தேதிக்கு, நீதிபதி சுப்பையா தள்ளிவைத்தார்

தொடக்கக் கல்வித் துறையில், நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை வழங்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது.


               தொடக்கக் கல்வித் துறையில், ஆண்டுதோறும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படும். கடந்த, 2013ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங்கில், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில், இரட்டை பட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நிறுத்தப்பட்டது. இதனால், பதவி உயர்வு கிடைக்காத பட்டதாரி ஆசிரியர் பலரும், பணியிட மாறுதல் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், கடந்த வாரம், இரட்டை பட்டம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை, உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும், என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

            இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பணியிட மாறுதல் நடைபெறும் ஒவ்வொரு முறையும், நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, பதவி உயர்வு மறுக்கப்பட்டு வந்தது. தற்போது, வழக்கு முடிவுக்கு வந்து, பல நாட்களாகியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு, தொடக்கக் கல்வித் துறையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பதவி உயர்வை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், இந்த கல்வியாண்டில் பதவி உயர்வு வழங்கவே முடியாத நிலை உருவாகும். இதனால், உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை வழங்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஆசிரியர் பணி நியமனம் தாமதமாகும், புதிய நியமனம் ஜூன் மாதம் நடைபெறும்

       ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும் தாமதமாகும். பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடக்கும்.
அதன்பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன் மாதம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இதனால் அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர்.இந்த முறை நடைபெற்ற தேர்விலும் பல குளறுபடிகள் ஏற்பட்டது. குறிப்பாக வினாத்தாளில் பல தவறுகள் இருந்தன. இதனால் பலர் வழக்கு தொடர்ந்தனர். எனவே தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகளை கடந்து ரிசல்ட் வெளியானது. வழக்கமாக ரிசல்ட் வெளியான சில மாதங்களில் பணி நியமனம் வழங்கப்படும்.

     ஆனால் இந்த முறை ரிசல்ட் வெளியானபின்னர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள்பாதித்தது. இதற்கிடையில் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீட்டு அடிப்படையில் குறைக்க வேண்டும் என்று பல அமைப்புகள் அரசை வலியுறுத்தியது.இது தொடர்பாக தேர்வு வாரியம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. தகுதியை மட்டும் பார்க்க வேண்டும். இதில் இடஒதுக்கீடு முறை கூடாது. மதிப்பெண் குறைப்பு இல்லை என்பதில் கண்டிப்புடன் இருந்தார். இதனால் 90 மதிப்பெண் பெற்ற 25 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. அவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட இருந்தது.

     இந்த நிலையில் கடைசி கட்டத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த பிரச்சனையில் தலையிட்டது. இடஒதுக்கீட்டு அடிப்படையில் மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வன்கொடுமை சட்டம் பாயும் என்று எச்சரித்தது. இது அரசுக்கு நெருக்கடியை தந்தது. இதனால் 5சதவீத மதிப்பெண் குறைப்பை முதல்வர் அறிவித்தார். இதனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. அதாவது 90 மதிப்பெண் பெற்று 25ஆயிரம் பேரும், இப்போது 82 மதிப்பெண்ணாக குறைத்துள்ளதால் கூடுதலாக 45 ஆயிரம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க வேண்டும்.இப்பணியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் ஈடுபடுவார்கள். இப்போது அவர்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மார்ச் 3ம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த பணிக்கு முன்பாக பல ஆய்வு கூட்டம் நடக்கும். இதற்குதுறையின் இணை இயக்குனர்கள் இருக்க வேண்டும். எனவே தேர்வு முடியும் வரையில் சான்றிதழ் சரிபார்க்க முடியாது.

        பிளஸ்2 தேர்வு முடிந்ததும் மார்ச் மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும். எப்படியும்10 நாட்களுக்கு மேல் இப்பணி நடக்கும். ஏப்ரல் மாதம் வெயிட்டேஜ் மதிப்பெண் பார்க்கப்படும். அதன் பின்னர் லோக்சபா பொதுத் தேர்தல் இருப்பதால், அடுத்த கல்வியாண்டில், அதாவது ஜுன் மாதம் தான் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவாறு அவர் கூறினார்.

Saturday, February 15, 2014

இந்தியாவின் 7 அதிசயங்கள்

             இந்தியாவின் 7 அதிசயங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வதில் சாதாரணமாக எலோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்.
எவையெல்லாம் இந்தியாவின் 7 அதிசயங்களாக பார்க்கப்படுகின்றன, அப்படி பார்க்கப்படும்படி என்ன அதிசயம் அவற்றில் காணப்படுகின்றன என்று பார்ப்போம்.

1.சிரபுஞ்சி வேர்ப்பாலம்

07-1383821853-meghalayalivingrootbridges
மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் காணப்படும் இந்த வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் உருவானது. மேகாலயாவின் பழங்குடியினரான ‘வார்-காசிஸ்’ மக்கள்தான் முதன் முதலில் இந்த வேர்ப்பாலத்தின் மூலம் ஆற்றை கடக்க ஆரம்பித்தனர். இதன் பின்னர் இப்பகுதி மக்கள் ரப்பர் மரங்களில் செயற்கையாக வேர்ப்பாலங்களை உருவாக்க தொடங்கினர். அதாவது பாக்கு மரத்தின் தடித்த பாகத்தை துளையிட்டு அதில் ரப்பர் மர வேர்களை நுழையச்செய்து அது அப்பக்கம் வளர்ந்து சென்ற பிறகு மண்ணுக்குள் செல்கிறது. இதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு பயணிக்க தகுதியான, உறுதியான வேர்ப்பாலமாக இது மாறிவிடும்.

2.மாமல்லபுரம் சமநிலை பாறை


07-1383821886-mahabalipurambalancingrock
மாமல்லபுரத்தில் காணப்படும் இந்த சமநிலை பாறை ‘கிருஷ்ணாவின் வெண்ணைப்பந்து’ என்று அழைக்கப்படுகிறது. பைசாவின் சாய்ந்த கோபுரம் போலவே எப்படா விழப்போகுது என்பது போன்றே தோற்றமளித்து கொண்டிருக்கிறது இந்தப் பாறை. இதே போன்ற பாறைகள் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரிலும், கன்ஹா தேசிய பூங்காவிலும் காணப்படுகின்றன

3.லொனார் விண்கல் பள்ளம்


07-1383821911-lonarcrater
லொனாரின் விண்கல் பள்ளம் தான் உலகிலேயே தீக்கல் பாறை வகைகளில் அமைந்த ஒரே உப்பு நீர் ஏரி ஆகும். அதோடு இந்த விண்கல் பள்ளம் 52,000 அண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு. இங்கு மயில், வாத்து, ஆந்தை, சிவப்பு மூக்கு ஆள்காட்டி போன்ற பறவைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் லொனார் ஏரியே கவின் கொஞ்சும் காட்சிக்கு சொந்தமானது. நமது பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் குறித்து அறிய விரும்புபவர்களும், புவியியல் மற்றும் அறிவியல் மீது நாட்டம் கொண்ட பயணிகளும் வாழ்கையில் ஒருமுறையாவது கண்டிப்பாக லொனார் ஏரிக்கு வர வேண்டும்.

4.மேக்னடிக் ஹில்

07-1383821935-magnetichill
உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம். இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

5.போரா குகைகள்

07-1383821992-borracaves
போரா குஹாலு என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படும் போரா குகைகள் அனந்தகிரி குன்றின் ஒரு பகுதியாக இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த குகைகள் கடல் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு, இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் சுண்ணாம்புக் கற்களாலேயே உருவாகியிருக்கும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக போரா குகைகள் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியல் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

6.மணிகரன் வெந்நீர் ஊற்றுகள்

07-1383822058-manikaranhotsprings
மணிகரன் நகரில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக திகழும் இந்த வெந்நீர் ஊற்றுகளில் ஒன்று ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாராவிலும் மற்றொன்று பார்வதி ஆற்றுப்பகுதியிலும் அமைந்துள்ளது. பார்வதி ஆற்றின் கரையிலுள்ள வெந்நீர் ஊற்று சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த ஊற்று நீரில் பல கதிரியக்க கனிமங்களும் இயற்கையான யுரேனியத் தாதும் கலந்திருப்பது பல ஆராய்ச்சிகளுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

7.அமர்நாத் பனிலிங்கம்

07-1383822083-amarnath
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் இமயமலையின் மீது 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் அமர்நாத் குகை அமைத்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலங்களில் பனிலிங்கத்தை தரிசிக்கலாம். அதாவது இயற்கையாக உருவாகும் பனிலிங்கமாக கருத்தப்படும் இது ஜூன் மாதம்உருவாகி ஆகஸ்ட் மாதத்தில் கரைந்துவிடும். இதனை தரிசிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் குகைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தமிழக பள்ளிக் கல்வியின் நிலை என்ன?- ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல் - தி இந்து.





அண்மையில் ப்ரதம் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தமிழக பள்ளிக் கல்வியின் நிலை அதிர்ச்சி அளிக்கும்படியாக இருந்தது.
கிராமங்களில் உள்ள 5-ம் வகுப்பு மாணவர்களில் 31.9 சதவீதம் பேர் மட்டுமே 2-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உரைநடைப் பகுதியை வாசிக்க முடிந்ததாகவும், 14 சதவீதம் பேர் மட்டும் 3 இலக்க எண்ணை ஓர் இலக்க எண்ணால் வகுக்க முடிந்தது என்றும் அதில் தகவல் இடம்பெற்றிருந்தது. இந்த இரு கற்றல் விகிதங்களும் தேசிய அளவில் பார்க்கும்போது ஒவ்வொன்றும் 47 சதவீதமாக உள்ளன. (பார்க்க படம் 1, 2)
ப்ரதமின் இந்த ஆய்வறிக்கை ஒரு மாதிரி கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 2005-ம் ஆண்டு முதல் இதுபோன்ற ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதில் தொடர்ந்து தமிழக கிராமப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் குறைவாக இருந்து வருவதாக கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேநேரத்தில் தமிழக பள்ளிக் கல்வி பற்றி வேறு இரண்டு அறிக்கைகளும் கிடைத்துள்ளன. ஒன்று என்.சி.இ.ஆர்.டி. (National Council of Educational Research and Training) என்ற மத்திய அரசு நிறுவனத்தின் பள்ளிக்கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதை ஆராயும் அறிக்கை. மற்றொன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி தொடர்பான புள்ளிவிவர அறிக்கை. 

என்.சி.இ.ஆர்.டி. ஆராய்ச்சியின் படி, 2011-ல் 5-ம் வகுப்பில் ஒவ்வொரு வாரமும் எத்தனை வகுப்புகள் (Periods) எடுக்கப் பட்டன. அவற்றில் ஒவ்வொரு பாடத்துக்கும் எத்தனை வகுப்புகள் ஒதுக்கப்பட்டன என்பதை படம் 3-ல் காணலாம்.
இதில் எல்லா பாடங்களுக்கும் எல்லா மாநிலங்களும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளிப்பது தெரிகிறது. ஒன்றில் தமிழகம் தனித்துவமாக உள்ளது. 5 பாடங்களைத் தவிர மற்ற பாடங்களான கலை, விளையாட்டு, கைவினை போன்றவற்றில் அதிக நேரம் செலவிடப்படுவதில்லை என்று தெரிகிறது. இதனால், மற்ற பாடங்களிலும் மாணவர்களின் செயல்திறன் குறையலாம்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனம் தேசிய கல்வி திட்டம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் இந்த நிறுவனம் மாவட்டக் கல்வி தகவல் முறை திட்டம் என்ற ஒரு திட்டத்தை தயாரித்து அதன் மூலம் எல்லா மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளின் வசதிகள், மாணவர் சேர்க்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்பட பல புள்ளிவிவரங்களை சேகரித்து கல்வி மேம்பாட்டு குறியீடு ஒன்றை தயாரிக்கிறது.
இந்த குறியீட்டின்படி, ஆரம்பக் கல்வியில் இந்திய மாநிலங்களில் முதல்நிலையில் உள்ள தமிழகம், நடுநிலைக் கல்வியில் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது குறித்து ஆராயப்பட வேண்டும். ஒன்று முதல் எட்டு வகுப்புக்கான மொத்த குறியீட்டின்படி தமிழகம், மாநிலங்கள் இடையே மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வரும்போது நம் பள்ளிக்கல்வித்திறன் பற்றிய சந்தேகங்கள் உறுதியாகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம், பிளஸ்-2 தேர்வில் கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பொறியியல் முதல் ஆண்டு கணித பாடத்தில் தேர்ச்சி அடையவில்லை என்பதால் அந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த
வேண்டியுள்ளது என்று கூறியது.
இன்றும் எல்லா பல்கலைக் கழகங்களிலும் முதுகலை படிப்பு வரை மென்திறன் என்ற பெயரில் ஆங்கிலத்திலும், தமிழிலும் கடிதங்கள், விண்ணப்பங்கள், பயோ-டேட்டா எழுதுவதையும் அன்றாட அலுவலக சூழலில் பேசுவதையும் கற்றுக்கொடுக்கிறோம், இவை எல்லாம் பள்ளியில் கற்பிக்கப்பட வேண்டியவை என்பதை நாம் உணர்வதே இல்லை. பல தனியார் நிறுவனங்கள் இவற்றை கற்பித்து ஏராளமாக சம்பாதிக்கின்றன.
ஆகமொத்தத்தில், தமிழகத்தில் பள்ளிகள் இருக்கின்றன. ஆசிரியர்கள் உள்ளனர். கற்றலும் கற்பித்தலும் நடக்கின்றன. ஆனால், கற்றலின் வெளிப்பாடு குறைவாக உள்ளது. இதுபற்றி நடுநிலையான ஆய்வு தேவை.
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்:
நமது ஆரம்பக் கல்வி பாடத்திட்டம், குழந்தைகளின் வயது, அவர்களின் ஆர்வம், திறமை அனைத்துக்கும் அப்பாற்பட்டு அமைந்துள்ளது. உலகத்தில் வேறு எங்கும் இதுபோல சுமையான பாடத்திட்டம் இல்லை. மொழிதான் அனைத்துக்கும் அடிப்படை. மொழி அறிவு சரியில்லை என்றால் மற்ற அனைத்தும் மோசமாகும்.குழந்தைகளுக்கு ஜீரோவில் இருந்து 9 வரை சொல்லிக் கொடுக்க 30 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று உளவியலாளர்கள் கூறுகிறார் கள். ஆனால், நாம் ஒரே நாளில் அவற்றை சொல்லிக் கொடுக்கிறோம். உண்மையில் குழந்தைகள் எண்களை தெரிந்துகொள்கிறார்கள். புரிந்துகொள்வதில்லை. எண்கள் விஷயத்தில் மனக்கணக்கு முறை அடியோடு போய்விட்டது.
பி.பி. பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர்:
பொதுவாக அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற கற்றல்திறனை பெற்றுள்ளனர். குழந்தைகளின் குடும்ப, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு கற்றல் குறைபாடு இருக்கலாம். இரண்டு மூன்று வகுப்புகளை சேர்த்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் குழந்தைகளின் குறைபாட்டை கவனிக்காமல் போயிருக்கலாம்.
’ஏசர்’ அறிக்கையில் கற்றல்திறன் தொடர்பான குறைபாடுகள் சொல்லப்பட்டுள்ளனவே ஒழிய அவற்றுக்கான காரணங்களோ, தீர்வுகளோ தெரிவிக்கப்படவில்லை. அரசுப் பள்ளிக ளில் ஆசிரியர் பற்றாக்குறையா? ஆசிரியர்கள் தகுதியில்லாமல் இருக் கிறார்களா? பாடம் நடத்த நேரம் போதவில்லையா? என எதுகுறித்தும் அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
அரசு தொடக்கப் பள்ளிகளில் மொழி ஆசிரியர், கணிதம், அறிவியல் பாடங்களுக்கும் தனியாக ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் அலுவலக பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.

Saturday, February 8, 2014

மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர் 05-02-2014 அன்று சென்னையில் இயக்குநர் அவர்களுடன் பேச்சுவார்த்தை.

         தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநிலத்தலைவர் ஆகியோர் சந்தித்து   பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள்  பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவது, பல்வேறு நிர்வாகம் சார்ந்தும் பேசப்பட்டது.  அரசாணை 216 & 179 வழக்கு சார்ந்து பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பிக்காத உ.தொ.க. அலுவலர்கள் நிலுவையில் உள்ள பட்டியல்களை உடன் சமர்ப்பித்து பணப்பயன்களை பெற்றுத்தர வேண்டும் எனவும்,  ஆசிரியர்களின் PUTPF கணக்குகளை GPF ஆக மாற்றிட 2013-14 வரை தணிக்கை செய்து வழங்கினால் AG ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளதால், 2013-2014-வரை உள்ளாட்சித் தணிக்கை செய்திட அனைத்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுடன் கணக்குகளை தயார் செய்து வைத்திடவும் தொடக்கக்கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டார்.