தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநிலத்தலைவர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவது, பல்வேறு நிர்வாகம் சார்ந்தும் பேசப்பட்டது. அரசாணை 216 & 179 வழக்கு சார்ந்து பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பிக்காத உ.தொ.க. அலுவலர்கள் நிலுவையில் உள்ள பட்டியல்களை உடன் சமர்ப்பித்து பணப்பயன்களை பெற்றுத்தர வேண்டும் எனவும், ஆசிரியர்களின் PUTPF கணக்குகளை GPF ஆக மாற்றிட 2013-14 வரை தணிக்கை செய்து வழங்கினால் AG ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளதால், 2013-2014-வரை உள்ளாட்சித் தணிக்கை செய்திட அனைத்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுடன் கணக்குகளை தயார் செய்து வைத்திடவும் தொடக்கக்கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment