பள்ளி கல்வித்துறை சார்பில், நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவில், 370
ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருதுகளை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன்
வழங்கினார்.
மாணபுமிகு அமைச்சர் பேசுகையில்,""கடந்த, இரு ஆண்டுகளில், 63 ஆயிரம் ஆசிரியர் நியமனம்
அறிவிக்கப்பட்டு, இதுவரை, 51 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வித்துறையை முன்னேற்ற, முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
வருகிறார்,'' என்றார்.
மதிப்புமிகு கல்வித்துறைச் செயலர் சபிதா பேசுகையில்,""அரசுப் பள்ளிகளில்,
ஆங்கிலவழி கல்வி துவங்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை
விட, ஒரு லட்சம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவியர் நலனுக்காக, 14 வகையான
நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது,'' என்றார்.