பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, August 21, 2013

51 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பணிமாறுதல் மூலம் நியமனம்.

பள்ளி கல்வித்துறை சார்பில், நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவில், 370 ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருதுகளை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.
மாணபுமிகு அமைச்சர் பேசுகையில்,""கடந்த, இரு ஆண்டுகளில், 63 ஆயிரம் ஆசிரியர் நியமனம் அறிவிக்கப்பட்டு, இதுவரை, 51 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையை முன்னேற்ற, முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்,'' என்றார்.

மதிப்புமிகு கல்வித்துறைச் செயலர் சபிதா பேசுகையில்,""அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி துவங்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை விட, ஒரு லட்சம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவியர் நலனுக்காக, 14 வகையான நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது,'' என்றார்.


Saturday, August 17, 2013

மாநில செயற்குழு கூட்டம் மற்றும் தெற்கு மண்டல கூட்டம்

             தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் தெற்கு மண்டல கூட்டம் கொடைக்கானல் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் 10-08-2013 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் முடிய நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து 150 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். 
         மாநில தலைவர் திரு.சு.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் திரு.சி.பாஸ்கரன் சங்க செயல்பாடுகள் சார்ந்தும், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்துவது