பள்ளிக்கல்வித் துறையின் அரசு இணைச்செயலாளர் உயர்திரு.டி. செல்வராஜ் அவர்கள் இன்று பணிநிறைவு பெற்றதை ஒட்டி தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜன், இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினை தெரிவித்தனர். வாழ்த்துகளை பெற்றுக்கொண்ட அரசு இணைச்செயலாளர் அவர்கள் இதுநாள் வரை சங்கம் சார்பாக தனக்கு அளித்த ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார். சங்கப்பொறுப்பாளர்களும் அரசு இணைச்செயலாளரும் பரஸ்பரம் அரைமணி நேரம் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Friday, April 29, 2016
Monday, April 25, 2016
Thursday, April 21, 2016
Saturday, April 16, 2016
வருந்துகிறோம்.
தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளரும் சங்கத்தின்பால் மிகுந்த ஈடுபாடும் கொண்ட அருமைச் சகோதரர் வெங்கடாஜலம் அவர்களின் தகப்பனார் நேற்று 15-04-2016 இரவு 10 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். சங்கத்தின் சார்பில் மாநில பொருளாளர் ப.மாதவராஜ் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Monday, April 4, 2016
பணிஓய்வு பெற்ற உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மாநில பொதுச்செயலாளர், மாநிலத் தலைவர் நேரில் வாழ்த்து.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் புகழேந்தி அவர்கள் 31-03-2016 அன்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து தஞ்சை மாவட்ட அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பணிநிறைவு பாராட்டு விழாவில் மாநிலத் தலைவர் இரவிச்சந்திரன், தஞ்சை மாவட்டச் செயலாளர் மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற உதவி தொடக்கககல்வி அலுவலரை பாராட்டினார்கள். திரு புகழேந்தி அவர்கள் சங்கத்திற்காக மாநில அமைப்போடு இணைந்து செயல்பட்டதை நினைவு கூர்ந்து வாழ்த்தினார்கள்.
தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் வேலூர் மாவட்டச் செயலாளரும் நெமிலி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலருமான திரு இராம கோவிந்தசாமி அவர்கள் 31-03-2016 அன்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து 03-04-2016 அன்று சங்கத்தின் சார்பாக காட்பாடி, காந்திநகர் திருமகள் திருமண மாகாலில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், காஞ்சி மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலர் இரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவில் வேலூர் மாவட்ட உதவி தொடக்கக்கக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். விழாவை தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட பொதுக்குழுவில் காவேரிபாக்கம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு சீனு.பவானந்தன் அவர்கள் தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் வேலூர் மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விழாவில் வேலூர் மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் இராம கோவிந்தசாமி அவர்கள் பணியாற்றிய பல்வேறு ஒன்றியங்களைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என 500 பேர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)