பள்ளிக்கல்வித் துறையின் அரசு இணைச்செயலாளர் உயர்திரு.டி. செல்வராஜ் அவர்கள் இன்று பணிநிறைவு பெற்றதை ஒட்டி தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜன், இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினை தெரிவித்தனர். வாழ்த்துகளை பெற்றுக்கொண்ட அரசு இணைச்செயலாளர் அவர்கள் இதுநாள் வரை சங்கம் சார்பாக தனக்கு அளித்த ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார். சங்கப்பொறுப்பாளர்களும் அரசு இணைச்செயலாளரும் பரஸ்பரம் அரைமணி நேரம் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment