பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, April 28, 2017

கல்வி அதிகாரிகளுக்கு கோடை கொண்டாட்டம்- தினமலர்.

மாணவர்களை தயார்படுத்த, சி.இ.ஓ., - டி.இ.ஓ., போன்ற கல்வித் துறை அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட பயிற்சி அளிக்கப் படுகிறது. புதிய கல்வி ஆண்டில், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும். அதனால், அவர்களுக்கு பயிற்சி அளித்து, பின், மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட ஆளுமை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மே, 3 முதல், 6 வரை, மதுரையில் சிறப்பு புத்தாக்க பயிற்சி நடக்கிறது. இதில், பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணன், டாக்டர் அமுதா ஹரி, ஒடிசா அரசின் கூடுதல் தலைமை செயலர், ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர், ச.மாடசாமி, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இந்த மூன்று நாள் பயிற்சியில் அதிகாரிகளுக்கு, அறுசுவை விருந்து, கலந்துரையாடல், விவாதம், நகைச்சுவை சொற்பொழிவு, சிலம்பம், கராத்தே, புத்தாக்க விளையாட்டுகள் போன்றவை இடம் பெற உள்ளன. பயிற்சி நிறைவு விழாவில், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
ஜூனில், புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, மாணவர்களை நெறிப்படுத்த, ஆசிரியர்களும், அதிகாரிகளும் புத்துணர்ச்சியுடன் தயாராக வேண்டும். 'நீட்' போன்ற பல போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அதற்கேற்ப, ஆசிரியர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, April 8, 2017

திருச்சியில் 09-04-2017 அன்று விரைவு மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

            நாளை 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

நாள்: 09.04.2017

நேரம்: காலை 10 மணி

இடம்: ஜான் பிரிட்டோ நடுநிலைப்பள்ளி,
             சேதுராமன் பிள்ளை காலணி பேருந்து நிறுத்தம் அருகில்
             T.V.S. டோல்கேட் 
             திருச்சிராப்பள்ளி.

            எதிர்வரும் 21-04.2017 அன்று  சென்னையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டு அழைப்பிதழ், சுவரொட்டிகள் திருச்சி செயற்குழுவில் வழங்கப்பட உள்ளது. எனவே மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கான அழைப்பிதழ்கள், சுவரொட்டிகளை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாநில மாநாட்டுக்கு அளிப்பதாக உறுதியளித்த பங்குத்தொகையினை திருச்சி செயற்குழுவில் மாநில பொருளாளர் திரு. ப.மாதவராஜன் அவர்களிடம் மாவட்ட செயலாளர்கள் வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                                                         இவன்
                                                                             மாநில அமைப்பு

சென்னையில் நடைபெற உள்ள மாநில மாநாடு அழைப்பிதழ்