தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Tuesday, January 19, 2016
Thursday, January 14, 2016
மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர்,தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர், இணை, துணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மாநிலத் தலைவர் இரா.இரவிச்சந்தின், பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன், பொருளாளர் ப.மாதவராஜன், இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர், தலைமைச்செயலக இணை, துணை, சார்பு செயலாளர்கள், தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து இணை, துணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Monday, January 11, 2016
திருச்சியில் 10-01-2016 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்ட தீர்மானங்கள்.
தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்
சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 10-01-2016 அன்று திருச்சி பிஷப்ஹீபர்
மேல்நிலைப்பள்ளியில் தலைவர் இரா.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.
பொதுச்செயலாளர்
சி.பாஸ்கரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இணைச்செயலாளர்
இரா.தமிழ்ச்செல்வன், தலைமை நிலையச்செயலாளர் மு.இராசேந்திரன்,
துணைச்செயலாளர் டே.மோசஸ் பெஞ்சமின், மகளிர் அணி துணைச்செயலாளர் ஆ.பூங்கொடி
மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி
உரையாற்றினார்கள். திருச்சி மாவட்ட செயலாளர் இ.ஜெகநாதன்
வரவேற்புரையாற்றினார். பொருளாளர் மாதவராஜன் நன்றியுரையாற்றினார்.
மாநில செயற்குழு தீர்மானங்கள்.
தீர்மானம் :1. பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு
பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்கி ஆணை
வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறோம்.
தீர்மானம் :2.
அனைத்து ஆசிரியர்களுக்கும் WEB PAYROLL மூலம் பட்டியல் தயாரித்து
வழங்கும் வகையில் நிலுவையில் உள்ள கோப்பின் மீது உடனே நடவடிக்கை எடுத்து
அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கும் வலைதளவசதி ஏற்படுத்தி
தருமாறு இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் :3.
2015 - 2016 கல்வியாண்டிற்குரிய முப்பருவமுறைக்கான புத்தங்கங்களை NODEL
மையத்திலிருந்து எடுத்து சென்று பள்ளிகளுக்கு வழங்கியமைக்கான லாரி வாடகை
உடனே தருமாறு கேட்டுக்கொள்கிறோம். 2016 பிப்ரவரி -15 ஆம் தேதிக்குள்
உரியபணம் வழங்கவில்லை எனில் இயக்க நடவடிக்கை எடுப்பது
எனமுடிவாற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் :4.
உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தொடக்கக்கல்வி
அலுவலர் பணியிடங்களையும், அமைச்சுப்பணியாளர் பணியிடங்களையும் உடனே
நிரப்பித்தர கோட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் :5. அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் நிலுவையில் உள்ள பயணப்படியை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம்:6.
இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சார்ந்து அரசாணை எண் 25ஐ
நடைமுறைபடுத்துவது குறித்து அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி
அலுவலர்களுக்கும் உரிய வழிகாட்டுதல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
Friday, January 8, 2016
திருச்சியில் 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில விரைவு செயற்குழு கூட்டம் - பொதுச்செயலாளர் அறிவிப்பு.
தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் விரைவு செயற்குழு கூட்டம் மாநில தலைவர் இரா. இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 10-01-2016 அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மிக முக்கியமான நிகழ்வுகள் பற்றி பொதுச்செயலாளர் திரு. சி. பாஸ்கர் அவர்கள் அறிவிக்க உள்ளார்கள். எனவே செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் தவறாது வருகைதந்து சங்கத்திற்கு வலுவூட்டிட கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் மாவட்டங்கள் தோறும் பயணப்பட்டியல் நிலுவைத்தொகையினை வருடங்கள் குறிப்பிட்டு எவ்வளவு நிலுவை உள்ளது என்ற விபரத்தை மாவட்டச் செயலாளர்கள் (இயன்றால் ஒன்றிய வாரியாக) அளித்தால் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் அளித்து கூடுதல் நிதி கோரிட வசதியாக இருக்கும்.
நமது கோரிக்கையை ஏற்று அன்மையில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பயணப்பட்டியல் நிலுவையை வழங்கிட கூடுதல் தேவைப்பட்டியல் அளித்திட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்ட கடிதத்தில் ( லெட்டர் பேடில்) மேற்குறிப்பிட்ட விபரங்களை எழுதி எடுத்துவர கேட்டுக்கொள்கிறோம்.
இக்கூட்டத்தில் 2016 ஆம் ஆண்டு நாள்குறிப்பு, நாட்காட்டி வெளியிடப்படுகிறது. இரண்டும் சேர்த்து ரூ.200 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் தவறாது வருகைதந்து தங்களுக்கு தேவையான எண்ணிக்கைக்கு தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நமது கோரிக்கையை ஏற்று அன்மையில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பயணப்பட்டியல் நிலுவையை வழங்கிட கூடுதல் தேவைப்பட்டியல் அளித்திட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்ட கடிதத்தில் ( லெட்டர் பேடில்) மேற்குறிப்பிட்ட விபரங்களை எழுதி எடுத்துவர கேட்டுக்கொள்கிறோம்.
இக்கூட்டத்தில் 2016 ஆம் ஆண்டு நாள்குறிப்பு, நாட்காட்டி வெளியிடப்படுகிறது. இரண்டும் சேர்த்து ரூ.200 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் தவறாது வருகைதந்து தங்களுக்கு தேவையான எண்ணிக்கைக்கு தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் பற்றியும், 2014 - 2015 நோட்டுபுத்தகங்களுக்கான லாரி வாடகை காசோலையை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் வழங்காத விபரத்தையும் லெட்டர் பேடில் எழுதி எடுத்துவர வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாவட்டங்களுக்கும் நாட்காட்டி, நாட்குறிப்பு வழங்கப்பட உள்ளது. அனைத்து மாவட்டப்பொறுப்பாளர்களும் உரிய தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். (வருகை தராத மாவட்டங்களுக்கு கண்டிப்பாக நாட்காட்டி, நாட்குறிப்பு லாரி பார்சல் மூலம் அனுப்பிட இயலாது) .
ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாவட்டங்களுக்கும் நாட்காட்டி, நாட்குறிப்பு வழங்கப்பட உள்ளது. அனைத்து மாவட்டப்பொறுப்பாளர்களும் உரிய தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். (வருகை தராத மாவட்டங்களுக்கு கண்டிப்பாக நாட்காட்டி, நாட்குறிப்பு லாரி பார்சல் மூலம் அனுப்பிட இயலாது) .
Thursday, January 7, 2016
Saturday, January 2, 2016
கூடுதல் ஊதியம் பெற்ற ஆசிரியர்கள் வசூலிக்க கல்வித்துறை உத்தரவு- தினமலர்.
ராமநாதபுரம்: கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்ற ஆசிரியர்களிடம்
இருந்து பணத்தை வசூலிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2011
ஜன.,1 க்குப்பின், தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்கள் பதவி
உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியமான 750 ரூபாயை சேர்த்து
கணக்கிட வேண்டும்.ஆனால் பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களான சிலருக்கு
அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாய் சேர்த்தது போக, மீண்டும் தனிஊதியமாக 750
ரூபாய் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனருக்கு புகார் சென்றது.இதையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவு:இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும் தனி ஊதியம் 750 ரூபாயை ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி, ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளலாம். மேலும் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும். அதன்பின் தனி ஊதியமாக 750 ரூபாய் வழங்க கூடாது. ஏற்கனவே வழங்கியவர்களுக்கு அவற்றை ஊதியத்தில் பிடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனருக்கு புகார் சென்றது.இதையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவு:இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும் தனி ஊதியம் 750 ரூபாயை ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி, ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளலாம். மேலும் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும். அதன்பின் தனி ஊதியமாக 750 ரூபாய் வழங்க கூடாது. ஏற்கனவே வழங்கியவர்களுக்கு அவற்றை ஊதியத்தில் பிடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Friday, January 1, 2016
Subscribe to:
Posts (Atom)