பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, November 26, 2014

மாநில மாநாடு ஆயத்தக்கூட்டம் மதுரை மண்டலத்தில் நடைபெற்றது.

             சனவரி-2015 இல் சென்னையில் நடைபெற உள்ள மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டம் மதுரையில் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் மாதவராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 60க்கும் மேற்பட்ட உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். அனைவரும் மாநாட்டில் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.





Sunday, November 23, 2014

கன்னியாகுமரியில் மாநில மாநாடு தயாரிப்பு கூட்டம் - மாநில நிர்வாகிகள் பங்கேற்பு.



           கன்னியாகுமாரியில் 22-11-2014 சனிக்கிழமை அன்று தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் மாநில மாநாடு தயாரிப்பு ஆயத்தக்கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் , தலைவர் , பொருளாளர் கலந்து கொண்டனர். மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த நாற்பது உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு அனைவரும் சனவரி 2015 சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்து கொள்வது என முடிவு செய்தனர்.

M.Phil படிக்க முன் அனுமதி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களே அளிக்கலாம். தொ.க.இயக்குநர் உத்தரவு.

Wednesday, November 19, 2014

திருச்சியில் தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 16-11-2014 அன்று நடைபெற்றது.

மாநில செயற்குழு தீர்மானம்.

 நாள்:  16-11-2014,                       இடம்: பிஷப் ஹிபர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.


  1. சங்க மாநில மாநாடு சென்னை தாம்பரம் பகுதியில் 2015 சனவரி மாதம் கடைசியில் நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது.
  2. 2015 ஆண்டுக்கான சங்க டைரி தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்து தீர்மானிக்கப்படுகிறது.
  3. விலையில்ல நோட்டு புத்தகம் நோடல் மையத்திலிருந்து ஒன்றியங்களுக்கு கோண்டுவந்து பள்ளிகளுக்கு வழங்க லாரி வாடகை     ( 2013 - 14 மற்றும் 2014 - 2015 கல்வி ஆண்டுக்கு ) இன்று வரை வழங்கவில்லை. உடனே வாடகை வழங்காத பட்சத்தில் மூன்றாவது பருவத்திற்கான நோட்டு புத்தகம் எடுத்து வழ்து வழங்க மறுபரிசீலனை செய்யப்படும் என தீர்மானிக்கப்படுகிறது.











Monday, November 3, 2014

இன்று உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணியேற்க உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வாழ்த்துகள்.

            உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பணிபுரிந்து இன்று (03-11-2014) உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணியேற்க உள்ள அனைவருக்கும் தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம்  பணிசிறக்க வாழ்த்துகளை தெரிவிக்கிறது.