பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Saturday, August 17, 2013

மாநில செயற்குழு கூட்டம் மற்றும் தெற்கு மண்டல கூட்டம்

             தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் தெற்கு மண்டல கூட்டம் கொடைக்கானல் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் 10-08-2013 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் முடிய நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து 150 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். 
         மாநில தலைவர் திரு.சு.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் திரு.சி.பாஸ்கரன் சங்க செயல்பாடுகள் சார்ந்தும், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்துவது
சார்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மதிப்புமிகு துறைச்செயலர் மற்றும் இயக்குநர்களுடன் சந்திப்பு குறித்தும் விளக்க உரை ஆற்றினார். மாநில பொருளாளர் திரு.ப.மாதவராஜன் சங்கத்தின் வரவு செலவு அறிக்கையினை வாசித்து ஒப்புதல் பெற்றார்.
                  கூட்டத்தில் மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில மகளிர் அணிச் செயலர் ச.இந்திராதேவி, மாநில துணைத்தலைவர் யோ.ஜேசுவடியான் மற்றும் மண்டலச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு மாநில முழுவதும் நடைபெற்றுவரும் நிகழ்வுகளையும், 3% உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - வழக்கு, பதவி உயர்வு பணியிடமாக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை உயர்த்துவது சார்ந்து கருத்துகளை தெரிவித்தனர்.

கிழக்கு மண்டல கூட்டம் - படங்கள்

 

 

No comments:

Post a Comment