பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, June 18, 2014

உதவி தொடக்க கல்வி அலுவலர் 156 பேருக்கு மாறுதல் உத்தரவு

சென்னை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வில், 156 பேர், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றனர். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் நடந்தது. இயக்குனர் இளங்கோவன் தலைமையில், 'ஆன் - லைன்' வழியில், 32 மாவட்டங்களிலும், கலந்தாய்வு நடந்தது. இதில், 344 அலுவலர்கள் பங்கேற்றனர். 156 பேர், விருப்பமான இடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கு உடனே, பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டன. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக, பணி மாறுதல் கலந்தாய்வும், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏழு தலைமை ஆசிரியர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக, பணி மாறுதல் பெற்றனர்.

No comments:

Post a Comment