பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, March 2, 2016

காஞ்சியில் நடைபெற்ற தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழுவில் நமது சங்க மாநில பொதுச்செயலாளர் பங்கேற்பு.

        கடந்த 27-02-2016 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட தேர்தல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சண்முகநாதன் மாநில பொதுச்செயலாளர் சௌரி அருணாசலம் மற்றும் மாநில துணைத்தலைவர் பாலு, தலைமை நிலைச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி அவர்கள் சங்க செயல்பாடுகளை பற்றி பேசினார்கள். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு  புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார்.

No comments:

Post a Comment