பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Thursday, November 28, 2013

உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இடைக்காலத்தடை நீக்கம் - தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் அடுத்த வெற்றி!

தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு சார்பான அனைத்து தடையானைகள் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணையை இரத்து செய்திட மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் மாதவராஜ் எடுத்த முயற்சியின் பயனாக இன்றைய தினம் (28-11-2013) சென்னை உயர்நீதி மன்றம் தடையாணையை இரத்து செய்துள்ளது. இதன் பயனாக விரைவில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற உள்ளது.இதில் AEEO-க்கள் 3% பதவி உயர்வு பெற உள்ளனர். இது மாநில நிர்வாகிகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் மாதவராஜ் ஆகியோரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் பாராட்டுகிறது.

No comments:

Post a Comment