பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, November 11, 2013

தொடக்கக்கல்வி இயக்குநர்களுடன் மாநில நிர்வாகிகள் சந்திப்பு.

கடந்த 29.10.2013 திங்கட்கிழமை அன்று  தலைவர் அ.பாலகிருஷ்ணன் , பொதுச்செயலாளர் ச.பாஸ்கர், பொருளாளர் ப.மாதவராஜ், சிவகங்கை மதிவாணன், திருவண்ணாமலை இராஜகோபால் மற்றும் கம்பம் முன்னாள் AEEO பாண்டுரங்கன் ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து சங்கம் சார்பான பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைத்தனர். 
2013 - 2014 கல்வியாண்டில் விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் எடுத்தச்சென்ற வகையில் மாநிலம் முழுதும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் மிகுந்த பொருட்செலவினம் செய்துள்ளனர். எனவே அதற்கான செலவினத்தை விரைந்து கிடைத்திட கோரிக்கை வைத்தனர். மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் அவர்களுக்கு தகவல் தெரிவித்து உடன் போக்குவரத்து செலவினத்தை பெற்று தருவதாக உறுதியளித்து அதைச்சார்ந்து விரைவு நடவடிக்கை எடுத்தார்.  மாநில நிர்வாகிகள் இயக்குநர் அவர்களின் கனிவான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தினர்.

No comments:

Post a Comment