தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை 21-07-2016 அன்று தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.சி.பாஸ்கரன் அவர்களும் மாநில இணைச்செயலாளர் இரா. தமிழ்ச்செல்வனும் சந்தித்தனர்.
உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான நடப்பாண்டு மாறுதல் கலந்தாய்வில் பணியாற்றிய ஒன்றியத்திற்கு மீள மாறுதல் கோரிட வாய்ப்பளித்தல், கடந்தாண்டு மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் இந்தண்டு கலந்தய்வில் பங்கேற்க அனுமதித்தல், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தேர்வுநிலை வழங்குவதில் சாதாரண விதிமுறைகூட தெரியாது செயல்படும் ஈரோடு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு உரிய அறிவுரை வழங்கிடுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
No comments:
Post a Comment