பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, July 15, 2016

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் - இயக்குநர்களுடன் சந்திப்பு.

            செஞ்சியில் நடைபெற்ற தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் தலைவர் இரா.இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன். பொருளாளர் ப.மாதவராஜ், இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன். தலைமை நிலையச் செயலாளர் மு.இராஜேந்திரன், மகளிர் அணிச்செயலாளர் ச.இந்திராதேவி மற்றும் மாநில துணை தலைவர்கள், துணை செயலாளர்கள் சென்னையில் இயக்குநர்களை சந்தித்து வாழ்த்துகள்  பெற்றதோடு பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றித்தர வலியுறுத்தி பேசினார்கள் .

தொடர்ந்து மூன்றாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. சி.பாஸ்கரன் அவர்கள் 
மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர்  அவர்களின் 
 வாழ்த்துகளை பெற்றபோது.

   மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன்
பொதுக்குழு தீர்மானங்களான ஈரோடு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக செயல்பாடுகள், பயணப்பட்டியல் நிலுவை, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீது சுமத்தப்பட்டு நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து தீர்வுகாணுதல், நேரடி நியமன AEEOக்களுக்கு உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்குதல், அலுவலக காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்தல், அனைத்து மாவட்டங்களுக்கும் மழலையர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்குதல் ஆகிய கோரிக்கைகள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு

 கடந்தாண்டு விடுபட்டுள்ள 3 உயர்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை இந்தாண்டு சேர்த்து பதவி உயர்வு வழங்கிட கோரும் பொதுக்குழு தீர்மானத்தை பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

           தொடர்ந்து பாடநூல் மற்றும் கல்வியியல் கழக செயலாளர்  அவர்களை சந்தித்து விலையில்லா பொருள்கள் புள்ளிவிவரங்கள் அனுப்பிட ஏதுவாக உதவி தொடக்கக்கல்வி அலுலவகங்களுக்கு கணினி, அச்சுப்பொறி, இணையதள இணைப்பு, மேசை, நாற்காலி ஆகியவை வழங்கவும், மற்றும் பாடபுத்தகம், குறிப்பேடுகளை விநியோகிக்க ஒன்றிய அளவில் நோடல் மையங்களை அமைத்திடவும் வலியுறுத்தி பேசப்பட்டது. உடன் மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்ளனர்.

 

தலைமைச்செயலாக மேனாள் தலைவர் திரு பீட்டர் அந்தோணிச்சாமி அவர்கள் தலைமைச்செயலக வளாகத்தில் மாநில நிர்வாகிகளுடன்.

No comments:

Post a Comment