தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பிரிவு எழுத்தராக பணியாற்றி தற்போது பட்டியல் பிரிவில் பணியாற்றி வரும் திரு ஜெயராமன் அவர்கள் 31-05-2016 அன்று பணி ஓய்வு பெற்றதை அடுத்து தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன் அவர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் சிட்டலாப்பாக்கம் ஒன்றியத்தில் பொதுச்செயலாளர் பணியாற்றியபோது பணியில் சேர்ந்து தற்போது சென்னை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வரும் எழுத்தர் சித்தாபாய் என்பவர் 31-05-2016 அன்று பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன் அவர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment