சென்னை: ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம்
தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்;
50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற
ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று
போராட்டத்தில் பங்கேற்றனர். பெரும்பாலானோர் விடுப்பு கடிதமும்
அளிக்காமல், பள்ளிக்கும் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதில்,
விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம்
பிடித்தம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
No comments:
Post a Comment