பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, September 30, 2015

நமது மாநில மாநாட்டு கோரிக்கையான 2014 - 2015 கல்வி ஆண்டிற்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் பெற்று வழங்கியமைக்காக போக்குவரத்து செலவினமாக ரூ.75 இலட்சம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

                நமது சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான முப்பருவ முறையில் விலையில்லா நோட்டு புத்தகங்கள் மாவட்ட மையத்தில் பெற்று ஒன்றியத்திற்கு உதவி  தொடக்கக்கல்வி   அலுவலர்கள்  வழங்கியமைக்கு         2014 - 2015 ஆம் கல்வி ஆண்டிற்கான போக்குவரத்து செலவின தொகை ரூ.75 இலட்சம் அனுமதித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். நமது சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் 2013 - 2014 ஆம் கல்வி ஆண்டிற்கான போக்குவரத்து செலவினத் தொகையும் விரைவில் வழங்கிட தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆக்கபூர்வமான வகையில் செயல்பட்டு வருகிறது.



No comments:

Post a Comment