பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, December 17, 2013

மாண்புமிகு கல்வி அமைச்சருடன் மாநில நிர்வாகிகள் வேலூர் மாவட்ட AEEOக்கள் சந்திப்பு - நிகழ்வுகள்.

 மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுடன் மாநில நிர்வாகிகள் சந்திப்பு.

            அரசாணை 182-ஐ அமுல்படுத்தி 3% உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட ஆவன செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் மாதவராஜ், மாநில துணைச்செயலாளர் ரெங்கராஜ், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சிவசங்கரன், மாவட்ட தலைவர் சார்லஸ் பீட்டர் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள், அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களும் மாண்புமிகு கல்வி அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  
                    பிறகு அமைச்சருடன் பேசிய  பொதுச்செயலாளர்  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 3% உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நன்றி அறிவிப்பு மாநாடு நடத்திட  தேதி ஒதுக்கித் தர வேண்டும்மெனவும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு  பணியிடமாக அறிவித்திட ஆவன செய்திட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். 
                     நன்றி அறிவிப்பு மாநாடு தேதி விரைவில் அறிவிப்பதாகவும், பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டிய கோரிக்கையை மாண்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர்  மற்றும் இயக்குனருடன் கலந்து பேசி ஆவன செய்வதாகவும்  அறிவித்தார்.










No comments:

Post a Comment