விலையில்லா பாடப்புத்தகம்-நோட்டு மாவட்ட மையத்திலிருந்து எடுத்து வந்து பள்ளிகளுக்கு அனுப்பிட AEEO-க்கள் செலவிட்ட செலவினங்களுக்கு இது நாள் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என திருச்சியில் 24-11-2013 ல் நடைபெற்ற மாநில செயற்குழுவின் தீர்மானத்தை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் அவர்களிடம் வழங்கியதின் விளைவாக 2013 - 2014 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதிக்கீடு தற்போது அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிதியினை விரைந்து பெற நடவடிக்கை எடுத்த மாநில பொதுச்செயலாளர் திரு.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் நன்றி. உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் செலவினத்தை பெற்றிட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரை அனுகவும்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment