தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் கடுமையான உழைப்பினால் AEEOக்கள் 7 பேர் பதவி உயர்வு
உதவிதொடக்கக்கல்விஅலுவலர்களுக்கு 3% உயர்நிலைப்பள்ளிதலைமைஆசிரியர்பணியிடம் வழங்கிட அரசாணை வெளியிட்ட பிறகு நீண்ட நாட்களாக நடைமுறைப் படுத்தப்படாமல் இருந்தது. தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் கடும் உழைப்பின் பயனாக அரசாணை-182-ன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாளை (14-12-2013) காலை 10 மணிக்கு கலந்தாய்வு மூலம் 33-க்கு 1 AEEO என்ற அடிப்படையில் முன்னுரிமை 34,68,100,134,168,200,234 வரிசைப்படி கீழ்கண்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் உயர்நிலைப்பள்ளிதலைமைஆசிரியர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர். இக்கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு நல்கிய மற்றும் உழைத்த அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் நன்றி.
No comments:
Post a Comment