திருச்சியில் 22-05-2016 அன்று நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டத்திற்கு கொண்டு வரவேண்டி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள செயற்குழு அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பெறுவது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று 13-05-2016 நடைபெற்றது. 18 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் சார்லஸ் பீட்டர், மாவட்ட செயலாளர் சிவசங்கரன், மாவட்ட பொருளாளர் இரமேஸ் ஆகியோர் பொறுப்பேற்று கூட்டத்தை நடத்தினார்கள். மாநில பொதுச்செயலாளர் திரு.சி.பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு இயக்க செயல்பாடுகளை விளக்கினார். காலிப்பணியிடவிபரம், ஒழங்கு நடவடிக்கை நிலுவையிலுள்ள விபரம், ஒன்றிய ஆசிரியர்கள் மீது அனுப்பியுள்ள புகார் விவரம், சந்தித்துள்ள வழக்குகள் விபரம், மாவட்ட பிரச்சனைகள் சார்ந்தும் விவாதிக்கப்பட்டது. பிற்பகல் 4.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது.
இதே போன்று சென்னை மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் அவர்கள் கூட்டத்தை நடத்தி அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் விவரங்களை பெற்றார்.
No comments:
Post a Comment