தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சென்னை மாவட்டக் கிளை சார்பில் கடந்த 31-01-2016 அன்று பணிஓய்வு பெற்ற மயிலாப்பூர் சரக கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு.கு.சங்கர் அவர்களுக்கு சென்னையில் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு. ஜோஸ்வா ஜான்சன் அவர்கள் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார். மாவட்டத் தலைவர் லு.வின்சென்ட் கிளாரா தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில துணைச்செயலாளர் சு.ரெங்கராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ந.த.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சி.ஆறுமுகம், மகளிரணி செயலாளர் கே.தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில மகளிரணிச் செயலாளர் எஸ்.இந்திராதேவி நன்றியுரை ஆற்றினார்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment