புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர் அவர்களை தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் மாநில பொதுச்செயலாளர், மாநில பொருளாளர், இணைச்செயலாளர் ஆகியோர் 09-07-2015 அன்று சந்தித்தனர். இயக்குநர் பெருமகனார் அவர்களுக்கு மாநிலத் தலைவர் பொன்னாடை அணிவித்தார். தொடக்கக்கல்வி இயக்குநர் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். சங்கத்தின் கோரிக்கைகளை கேட்டறிந்த இயக்குநர் அவர்கள், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள உதவித் தொடங்கக்கல்வி அலுவலர்களுக்கு உடனே இறுதியாணை பிறப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மாநில பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment