தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டமும், மாநிலத் தலைவர் திரு.சு.பாலகிருஷ்ணன் பணி ஓய்வு பெற்றதால் புதிய தலைவர் தேர்தலும் தஞ்சை வி.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர்களால் மாநிலத் தலைவர் தேர்தல் நடைமுறை அறிவிக்கப்பட்டவுடன் தஞ்சை இரா.இரவிச்சந்திரன் மற்றும் திருநெல்வேலி யோ.ஜேசுவடியான் ஆகியோர் போட்டியிட்டனர். மாவட்ட செயலாளர்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டதில்
தஞ்சை இரா.இரவிச்சந்திரன் - 18 வாக்குகளும்
திருநெல்வேலி யோ.ஜேசுவடியான் - 5 வாக்குகளும்
NOTA - 1வாக்கும் பெற்றனர்.
ஜனநாயக முறைப்படி பெறும்பான்மை வாக்குகள் பெற்ற தஞ்சை இரா.இரவிச்சந்திரன் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வகித்த மாநில துணைச்செயலாளர் பதவிக்கு மதுரை டே.மோசஸ் பெஞ்சமின் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற மாநிலத் தலைவர் பணிஓய்வு பாராட்டுவிழாவில் திரு.சு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மாநில அமைப்பின் சார்பில் கணையாழி அணிவிக்கப்பட்டு பொண்ணாடை போர்த்தப்பட்டது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment