பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, January 9, 2017

திருச்சியில் 08-01-2017 அன்று நடைபெற்ற தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தின் நிகழ்வுகள்.

       மாநிலத் தலைவர் இரா.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன் அவர்கள் நமது சங்கத்தின் 2017 ஆம் ஆண்டு நாட்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றை வெளியிட 2017 டைரியை உருவாக்கிய மாநில இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் அவர்கள் பெற்றுக்கொண்டார். 30 மாவட்டங்களில் இருந்து வருகைதந்த மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் சங்க செயல்பாடுகள், மாவட்டங்களில் DEEO அலுவலகங்களில் உள்ள பிரச்சனைகள், ஆசிரியர் சங்கத்தின் பெயரால் சில இடங்களில் உருவாக்கும் பிரச்சனைகள் பற்றியும், சங்கத்தின் சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், AEEOக்களின் நிலுவை பயணப்பட்டியலை தொடக்கக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்ட பிறகும் அனுமதித்திடாத DEEO அலுவலகங்கள் நிலை பற்றியும் விவாதித்தனர். தற்போது AEEO அலுவலகங்களுக்கு கணினி, பிரின்ட்டர், மேஜை, மோடம் மற்றும் இணைய இணைப்பு ஆகியவற்றை தமிழ்நாடு பாடநூல் கழக நிதி மூலம் பெற நமது சங்கம் 2013 முதல் எடுத்த நடவடிக்கைகள், விரைவில் இணையவசதிக்கு மாதக்கட்டணம் தொடர்செலவினத்திற்கு நிதி ஒதுக்கீடு அரசாணை சில நாட்களில் பெற உள்ளது பற்றியும் பொதுச்செயலாளர் கூறினார். 2017 ஆம் ஆண்டில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தனி ஊதிய விகிதம் பெறுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.மாநில பொருளாளர் மாதவராஜன் நிதி தொடர்பாக பேசினார்.













No comments:

Post a Comment