பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, December 6, 2015

அடாத மழையிலும் எழுச்சியுடன் திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு.

           தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று 06-12-2015 திருச்சி பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் மாநில தலைவர் இரா.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து புதியதாக மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்ற இச்செயற்குழுவில் 24 மாவட்டங்களில் இருந்து 100க்கும் அதிகமான பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் திருச்சி மார்ட்டின் வரவேற்புரை ஆற்றினார். 
              24 மாவட்டங்களைச்சார்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்திடுவது, நீதிமன்ற வழக்கு தொடர்பாக அலுவலர்கள் படும் துயரம், நீண்ட காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பயணப்படி நிலுவை, அரசாணைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறுவிதமாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் முடிவு எடுப்பது, பி.எப். கணக்குத்தாளை பயன்படுத்துவது, இணையதளவசதி ஏற்படுத்தித்தருவது ஆகியவை தொடர்பாக கருத்துகளை தெரிவித்தனர்.
                தொடர்ந்து பேசிய மாநில பொதுச்செயலாளர் திரு.சி.பாஸ்கரன் நீதிமன்ற வழக்கு, மாநில பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பாக இதுவரை மாநில அமைப்பு எடுத்துவரும் நடவடிக்கைகள், தொடர்ந்து மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள், குறிப்பேடுகள் பெற்று வழங்கியமைக்கு 2 ஆண்டுகளுக்கு நிலுவையில் உள்ள லாரி வாடகை தற்போது பெறப்பட்டுள்ளது, வழக்கு சார்ந்து அலுவலர்கள் படும் வேதனைகள் தொடர்பாக தொடர்நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்து பேசினார்.
                   மாநில பொருளாளர் ப.மாதவராஜன் சங்க வரவு-செலவினை வாசித்து நிலுவை வழங்க வேண்டிய மாவட்டங்கள் விரைவில் வழங்கிட கூறினார். மாநில இணைச்செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன் சங்க நிகழ்வுகளை பற்றி பேசி நன்றியுரை கூறினார். முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் காரணமாக உறுப்பினர்கள் அனைவரும் தமது ஒருநாள் ஊதியத்தை தமிழக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளிப்பது என முடிவாற்றப்பட்டது. 
















No comments:

Post a Comment