கடந்த 08-08-2015 அன்று சென்னை தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான 2015 - 2016 ஆம் ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு நிகழ்வினை தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்கள், அலுவலர்கள் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டு கல்வித்துறை முன்னேற உழைத்திட வேண்டுமென கூறி தொடங்கிவைத்தார். தொடர்ந்து இணை இயக்குநர்கள் (நிர்வாகம்) மற்றும் (நிதி உதவி பெறும் பள்ளிகள்) இருவரும் நான்கு மண்டலங்களாக அனைத்து AEEOக்களுக்கும் மாறுதல் கலந்தாய்வினை சிறப்பாக நடத்தினார்கள். உடனுக்குடன் மாறுதல் ஆணைகளை தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் வழங்கினார்கள். சிறப்பாக கலந்தாய்வினை நடத்தி அனைவரும் மகிழத்தக்க வகையில் செயல்பட்ட தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை மாநிலத்தலைவர் இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜன், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment