பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, July 7, 2014

திருச்சியில் 06-07-2014 அன்று நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானங்கள்.

       உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை ஒளிவுமறைவற்ற வகையில் சிறப்பாக நடத்திட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர், மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலர், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
                மேலும் அரசாணை 182ஐ நடைமுறைப்படுத்தி இதுவரை 15 AEEOக்கள் உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர்  அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு விரைவில் நடத்துவது எனவும், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவியுயர்வு பணியிடமாக அறிவித்து உரிய ஊதியவிகிதம் வழங்கிட வலியுறுத்தியும்,  மாவட்ட புத்தக மையத்தில் இருந்து ஒன்றியத்திற்கு பாடபுத்தகம், குறிப்பேடுகள் எடுத்து சென்றுள்ளமைக்கு உரிய போக்குவரத்து செலவினங்களை விரைவில் வழங்கிடவும், பள்ளிகளை பார்வையிடவும், உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவும் சென்று வருகின்ற  AEEOக்களுக்கு பயணப்படி பட்டியல்கள் பல வருடங்களாக நிலுவையில் உள்ளதால் அவற்றை உடன் வழங்கிடவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களை பொதுச்செயலாளர் பாஸ்கர் முன்மொழிந்து பேசினார். மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்று தீர்மானம் சார்ந்த கருத்துகளையும், மாநில முழுவதும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உள்ள பிரச்சனைகளையும் பேசினார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து 75 உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment