பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, July 11, 2014

மாத சம்பளதாரருக்கு மகிழ்ச்சியான செய்தி வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக உயர்வு வீட்டுக்கடன் வட்டி வரிச்சலுகையும் அதிகரிப்பு


மாத சம்பளதாரருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக உயர்த்தப்படுகிறது.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக இருந்து வந்தது. பட்ஜெட்டில் இந்த உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மாத சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாகும். இதன் மூலம் சுமார் 2 கோடி பேர் பலன் அடைவார்கள்.

மூத்த குடிமக்களுக்கு சலுகை
இதே போன்று மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பும் உயர்த்தப்படுகிறது. இது ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக வெளியான பிற முக்கிய அறிவிப்புகள் வருமாறு:–
* ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உடைய தனிநபர்களுக்கான வரி 10 சதவீதமாக நீடிக்கும்.
* ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானத்துக்கு வருமான வரி 30 சதவீதமும் விதிக்கப்பட்டு வருவது தொடரும்.
சேமிப்புக்கு சலுகை
* சேமிப்புகள் உள்ளிட்டவை அடங்குகிற 80–சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது சேமிப்பினை ஊக்குவிக்கும் முடிவாக அமைந்துள்ளது.
* பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்தது. இது ரூ.1½ லட்சமாக உயர்த்தப்படுகிறது.
*வீட்டு கடன் மீதான வட்டிக்கு ரூ.1½ லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்தது. இதுவும் ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
* வருமான வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வருமான வரி தீர்வு ஆணையம் அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment