பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Saturday, March 22, 2014

`முதுக்குளத்தூர் உ.தொ.க.அலுவலர் திரு ஐ.சூசைதாஸ் அவர்கள் சாலை விபத்தில் அகால மரணம். மாநில அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

            



           தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் உதவித்தொடக்கக்கல்வி அலுவலருமான திரு.ஐ.சூசைதாஸ் அவர்கள் 20-03-2013 அன்று மதுரையில் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்து அகால மரணம் அடைந்துள்ளார்கள். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் திரு பாஸ்கரன் அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  அன்னாரின் சொந்த ஊரான  சவுரியாபட்டினத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் மாநில அமைப்பின் சார்பில் மாநில பொருளாளர் திரு.மாதவராஜன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சட்டமன்ற உறுப்பினர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்த அன்னாரின் உடலுக்கு மாநில அமைப்பின் சார்பில் மாநில தலைவர் திரு.சு.பாலகிருஷ்ணன் அவர்கள்  அஞ்சலி செலுத்தி உடலை உறவினரிடம் ஒப்படைத்தார்கள். அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment