உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவது சார்ந்து தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் மாதவராஜன், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடந்த 22-01-2014 அன்று மதிப்புக்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து நீண்ட நேரம் விவாதித்தனர். பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவதற்கு என்னால் முடிந்த உதவிகளை நானும் செய்கிறேன் என்ற உறுதியை இயக்கப் பொறுப்பாளர்களிடம் மதிப்புக்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அளித்தார்கள்.
மறுநாள் 23-01-2014 அன்று மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் மாதவராஜன் ஆகியோர் சார்பு செயலர் திரு. தவசி அய்யா, மதிப்புக்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் திருமதி சபிதா ஆகியோர்களை சந்தித்து 3% உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளித்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன், AEEO பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவது சார்ந்து மனுக்களை அளித்தனர். மலர்ந்த முகத்துடன் விவரங்களை பெற்றுக்கொண்ட மதிப்புமிகு முதன்மைச்செயலர் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment