பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Saturday, January 25, 2014

உ.தொ.க.அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்துவது சார்ந்து மாநில நிர்வாகிகள் மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலர் அவர்களுடன் சந்திப்பு.

                      உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவது சார்ந்து தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் மாதவராஜன், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடந்த 22-01-2014 அன்று மதிப்புக்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து நீண்ட நேரம் விவாதித்தனர். பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவதற்கு என்னால் முடிந்த உதவிகளை நானும் செய்கிறேன் என்ற உறுதியை இயக்கப் பொறுப்பாளர்களிடம் மதிப்புக்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அளித்தார்கள். 
       மறுநாள் 23-01-2014 அன்று மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் மாதவராஜன் ஆகியோர் சார்பு செயலர் திரு. தவசி அய்யா, மதிப்புக்குரிய பள்ளிக்கல்வித்துறை  முதன்மைச்செயலாளர் திருமதி சபிதா ஆகியோர்களை சந்தித்து 3% உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளித்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன், AEEO பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவது சார்ந்து மனுக்களை அளித்தனர். மலர்ந்த முகத்துடன் விவரங்களை பெற்றுக்கொண்ட மதிப்புமிகு முதன்மைச்செயலர் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment