05-01-2014ல் தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு காரைக்குடியில் நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டின் நாட்காட்டி, நாள்குறிப்பு வெளியிடுதல் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்றுள்ள உ.தொ.க.அலுவலர்களுக்கான பாராட்டு விழாவும் இந்நிகழ்வில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் திரு.யேசுவடியான் தலைமையில் பொதுச்செயலாளர் திரு.பாஸ்கரன் தீர்மானங்களை விளக்கி பேசினார். மாநில பொருளாளர் திரு.மாதவராஜ், மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள், பங்கேற்று பேசினார்கள். விரைவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி பாராட்டி மாநில மாநாடு நடத்துவது எனவும், பொங்கல் பரிசு வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது.உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டை ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment