பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Saturday, August 20, 2016

சென்னையில் புதிய மாவட்டச்செயலாளர் தேர்வு - பொதுச்செயலாளர் பங்கேற்பு.

              சென்னை மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய திரு ரெங்கராஜ் அவர்கள் ஓய்வு பெற்றதால் புதிய மாவட்டச் செயலாளர் தேர்வு பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ந.த.சண்முகம் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் பெற்று தற்போது சென்னைக்கு மாறுதல்  பெற்று நர்சரி ஏ.இ.இ.ஒ. ஆக பணியேற்றுள்ள திரு.எம்.கிருஷ்ணகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் வேறு மாவட்டத்திற்கு மாறுதலில் சென்றுள்ளதால் திருமதி.சி.வினோதினி புதிய மாவட்ட மகளிர் அணிச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை பதவி ஏற்கச்செய்து  அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் மாவட்ட அமைப்பை மாநில அமைப்பின் வழிகாட்டுதலோடு சிறப்பாக வழிநடத்துவதாக உறுதியளித்து பேசினார். நேரடி நியமன ஏ.இ.இ.ஒ. ஆக இருந்து சங்க செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பெறுப்பேற்றுள்ள திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் தற்போது சென்னை மாவட்டத்தில் உள்ள இருவர் தவிர அனைவரும் இணைந்துள்ளதால் சென்னை மாவட்டச் சங்கத்தை சிறப்பாக வழிநடத்திட உள்ள இளம் தலைவர்” என பொதுச்செயலாளர் வாழ்த்திப்பேசினார். 
        






No comments:

Post a Comment