திருச்சி மண்டல ஆயத்தக்கூட்டம் 13-12-2014 அன்று பெரம்பலூரிலும், சென்னை மண்டல ஆய்வு கூட்டம் 14-12-2014 அன்று திருவள்ளூரிலும் நடைபெற்றது. மண்டலச்செயலாளர்கள் த.ஹேமலதா, அ.குருநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் மாதவராஜ், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், துணைச்செயலாளர் ரெங்கராஜ், மாநில மகளிர் அணிச்செயலாளர் இந்திராதேவி, செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும் சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment