PUTPF கணக்கு முடித்திட கால அவகாசம் கேட்டு எழுதிக் கொடுத்திட LF தணிக்கைத் துறை கேட்டால் எந்த AEEO-ம் எழுதி கொடுத்திட வேண்டாம். தணிக்கைத் துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் வர இயலாத சூழலை நமது கடிதத்தை பயன்படுத்தி மறைக்கும் வேலைகள் நடைபெறுவதால், இதை காரணமாக பயன்படுத்தி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் தணிக்கைக்கு AEEO-க்கள் தயாராக இல்லாததால் தணிக்கை முடிக்க இயலவில்லை என தணிக்கைத் துறை கூறுகின்றனர். இதனால் பல பிரச்சனைகள் எழுகின்றது. எனவே இனி தணிக்கையை உடன் முடித்திட நடவடிக்கை எடுத்திட கேட்டுக்கொள்கிறேன்.
2014 நாட்காட்டியுடன் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரசாணைகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட நமது சங்கம் முடிவு செய்துள்ளது. எனவே முக்கியமான அரசாணைகள், இயக்குநர் உத்தரவுகள், தெளிவுரைகள், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பயன்படக்கூடிய உத்தரவுகளை நமது பொதுச்செயலாளரின் கீழ்க்கண்ட முகவரிக்கு நகல் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்கிறோம்.
சி.பாஸ்கரன்
உதவி தொடக்கக்கல்வி அலுவலர்
60A, 2-வது தெரு
கோவிந்தராஜபுரம்
நந்திவரம்
கோவிந்தராஜபுரம்
நந்திவரம்
காஞ்சிபுரம் மாவட்டம் - 603 202.
No comments:
Post a Comment