கடந்த 06-11-2016 அன்று சென்னை தாம்பரம் மாநில செயற்குழு தீர்மானத்தினை அடுத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பயணப்படி நிலுவை நீண்டகாலமாக இருப்பதால் அதனை உடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் 07-11-2012 அன்று சென்னையில் நேரில் மாநில நிர்வாகிகளால் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று தற்போது மாவட்டங்களுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ள தொகையினை உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உடன் பயணப்பட்டியல் நிதி ஒதிக்கீடு அனுமதித்து கூடுதல் தேவை குறித்த விபரங்களை 15-12-2016க்குள் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு பட்டியல் அனுப்பிட மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களை தொடர்புகொண்டு விபரங்களை எடுத்துக்கூறி தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகையினை உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பெறுவதுடன், கூடுதல் தேவை பட்டியல் தொடக்கக்கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment